32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 237 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 237)
சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி ! Running News

சேது திட்டம் வேண்டவே வேண்டாம்: தமிழக அரசு உறுதி !

“சேதுத் திட்டம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்ட பகுதியில் பருவநிலை, சுற்றுச்சூழல், இயற்கைச் சீற்ற பாதிப்புகள் போன்ற நுட்பமான ஆய்வுகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் அபாயமுள்ள சேதுத் திட்டத்தை நிறைவேற்றுவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதால் இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. முன்னதாக சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவராக இருந்தபோது சுப்பிரமணியன் சுவாமி, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான […]

November 27, 2013 admin
அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை? Running News

அலட்சியப் படுத்தலாமா அறிவியல் கல்வியை?

இந்தியாவில் அறிவியலுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது முட்டாள்தனமானது என பாரத ரத்னா விருது பெறவிருக்கும் விஞ்ஞானியும், பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுத் தலைவருமான பேராசிரியர் சி.என்.ராவ் கூறியுள்ளதை வெறும் ஆவேசமான பேச்சு எனப் புறந்தள்ளிவிட முடியாது. மத்திய அறிவியல்,தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும், பேராசிரியர் ராவின் இந்தக் கருத்தை வழிமொழிந்துள்ளார். “தகவல் தொழில்நுட்பம் என்பது அறிவியல் சார்ந்தது அல்ல. அந்தத் துறையில் பணியாற்றும் பலரும் மனஉளைச்சலுக்கு இலக்காகி அவதிப்பட்டு வருவதை நான் அறிவேன். […]

November 26, 2013 admin
இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக் Running News

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..! By ரவி நாக்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் – இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் – உண்மையில் நடந்தது என்ன? இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்திருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு ஏன் கூறவில்லை? இதன் கோப்புகளை பற்றி அரசு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மவுனம் சாதிப்பது ஏன்? […]

November 25, 2013 admin
தலைமாறிய மகுடம்! Running News

தலைமாறிய மகுடம்!

உலக செஸ் சேம்பியனாக மேக்னஸ் கார்ல்சன் வாகை சூடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. சென்னையில் முதல் தடவையாக நடக்கும் போட்டியில் நம்மூர் ஆனந்த் பட்டத்தை தக்கவைத்தால் பெருமை என மனதோரம் ஆசை படபடத்ததிலும் தப்பில்லை.ஆனந்த் நிறைய சாதித்துவிட்டார். தாய்நாட்டில் செஸ் புத்துயிர் பெற பெரும் பங்களித்துள்ளார். எல்லா நல்ல விஷயங்களும் ஒருநாள் நிறைவு பெறும் என்ற நியதிக்கு விதிவிலக்கு கிடையாதுதானே. நார்வேயின் இளம்புயல் மேக்னஸ் 10 சுற்றுகளில் ஆறரை புள்ளிகள் எடுத்து 2 சுற்றுகளுக்கு முன்பாக […]

November 24, 2013 admin
விமர்சனத்துக்கு உள்ளாகும் விருதுகள் Running News

விமர்சனத்துக்கு உள்ளாகும் விருதுகள்

இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை சிவிலியன் விருதுகள். அரசியல் சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற […]

November 23, 2013 admin
ரிசர்வ் வங்கியின் போக்கையே புரிஞ்சிக்க முடியலையே! Running News

ரிசர்வ் வங்கியின் போக்கையே புரிஞ்சிக்க முடியலையே!

மந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் சாதாரண மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அந்த மக்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் உள்ளன. ஆனால், அதைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உள்ளன. தனக்கு எந்தவிதமான மருந்து கொடுக்கப்படுகிறது என்பதை நோயாளி அறிந்திருக்க வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகியவைதான் இலக்குகள் என நடப்பாண்டின் 2ஆவது காலாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையின் சமீபத்திய ஆய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்துள்ள நடவடிக்கைகள் […]

November 22, 2013 admin
யாதும் ஊரே யாவரும் கேளிர்! Running News

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

மதுரை என்றால் மல்லிகை, நெல்லை என்றால் அல்வா, காஞ்சிபுரம் என்றால் பட்டுச் சேலை என ஒவ்வோர் ஊருக்கும் ஒரு புகழ் உண்டு. தொழில் சார்ந்து இந்த பெயர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏற்பட்டு காலம் காலமாக நிலைத்து நிற்கின்றன.இதுபோல் மனிதர்களும் அவரவர்கள் செய்த சாதனைகளால் வேறுபடுத்தி அறியப்படுகின்றனர். இது உலகம் முழுமைக்கும் பொதுவானது. இதுபோன்ற வேற்றுமைகள் சிறப்பை குறிக்கக் கூடியவையாக இருக்கின்றன. விலங்குகளிலும் தாவரங்களிலும் இன வேற்றுமை உண்டு. ஒவ்வொன்றின் குணம் அடிப்படையில் அவை பிரித்து பார்க்கப்படுகின்றன. மனிதர்களில் […]

November 20, 2013 admin
காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 2 Running News

காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 2

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து பத்து ஆண்டுகள் வீற்றிருக்கும் வாய்ப்பை மன்மோகன் சிங் பெற்றிருக்கிறார். நான்கு முறை தொடர்ந்து நேரு பிரதமராக இருந்தார். அவருக்கும் இந்திரா காந்திக்கும் பிறகு வேறு எந்தப் பிரதமருக்கும் இல்லாத அளவுக்கு இருமுறை பிரதமராக இருக்கும் வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கு மட்டும்தான் அமைந்தது. அவருக்கு அது பெருமை, அதுவே பதவிக்கு ஏற்பட்ட சிறுமை.ஒவ்வொரு முறையும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக, கட்சியின் மக்களவைத் தலைவராக நேரு விளங்கினார். அது மக்களவைக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் வளர்ச்சியைத் […]

November 19, 2013 admin
காமன்வெல்த் மாநாடும்  இந்தியாவும் – 1 Running News

காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 1

இந்தியா 1947 ஆகஸ்டு 15இல் விடுதலை பெற்றது. அரசமைப்புப் பேரவை 1946 டிசம்பரில் தொடங்கி, 1950 டிசம்பர் 26இல் அரசமைப்புச் சட்டத்தைத் தந்தது. அதுவரை, சட்டப்படி, ஆங்கில ஏகாதிபத்தியக் காமன்வெல்த்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாகத்தான் இந்தியா இருந்தது.1949 ஏப்ரல் 27இல் லண்டனில் கூடிய காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜவாஹர்லால் நேரு சுதந்திர இந்தியா காமன்வெல்த் அமைப்பில் சேருவது குறித்து சில வரைமுறைகளை வற்புறுத்தினார். லண்டன் காமல்வெல்த் பிரதமர்கள் மாநாடு முடிவடைந்ததும், இந்தியாவில் நேரு வெளியிட்ட […]

November 18, 2013 admin
இணைய தளங்கள் மூலமாக குழந்தைகள் பாலியல் பாதிப்புகள் – தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை Running News

இணைய தளங்கள் மூலமாக குழந்தைகள் பாலியல் பாதிப்புகள் – தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை

“சமீபகாலமாக குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்ததற்கு இன்டர்நெட் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொருவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டினாலும் வரும்காலத்தில் குழந்தைகளை அது கடுமையாக பாதிக்கும் என்பது எனது கருத்தாகும். இதன்மூலம் குழந்தைகள் கடுமையான குற்றங்களைச் செய்யலாம். தற்போது மொபைல் போன்கள் மூலம் இன்டர்நெட் வசதி வந்துள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது.” என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னையில் உள்ள ஜுடிசியல் […]

November 17, 2013 admin
உடனடி செய்திகள்