32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 236 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 236)
குடிபோதையில் வாகனம் 58 ஆயிரம் பேர் மீது வழக்கு – சென்னை சாதனை! Running News

குடிபோதையில் வாகனம் 58 ஆயிரம் பேர் மீது வழக்கு – சென்னை சாதனை!

அண்மையில் நாடு முழுவதும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா,ஆந்திரா உட்பட 16 மாநிலங்களில் சாலை போக்குவரத்து கல்வி நிறுவனம் (ஐ.ஆர்.டி.இ) மற்றும் மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 27 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஒட்டுவதாகவும், 29 சதவீதம் பேர் தூக்கமி்ன்மை, 12 சதவீதம் பேர் மன அழுத்தம் 4 சதவீதம் பேருக்கு நிறக்குருடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழகத் தலைநகரில் கடந்த ஆண்டு குடித்து விட்டு போதையுடன் வாகனம் […]

December 8, 2013 admin
சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் மீண்டும் வெல்வோம்! Running News

சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டால் மீண்டும் வெல்வோம்!

இந்தியாவில் ஹாக்கியின் இன்றைய நிலைமை பற்றி சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்திருப்பது அந்த விளையாட்டை நேசிக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கும். எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது இந்திய ஹாக்கி அணி. ஏதோ மாய மந்திரம் செய்கிறார்கள் என்று உலகம் பேசும் அளவுக்கு அசாத்திய திறமையை நமது வீரர்கள் வெளிப்படுத்தினர். ஆனால் 1980க்கு பிறகு அரையிறுதி போட்டிக்குக்கூட தகுதி பெற முடியாத பரிதாப நிலைக்கு ஆளானோம். உலக கோப்பையிலும் அதே கதி. ஆதங்கத்துடன் […]

December 6, 2013 admin
நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு Running News

நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு

தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார் என்று தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்கள் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நெல்சன் மண்டேலா… ஜூலை […]

December 6, 2013 admin
வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை!. Running News

வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை!.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 37 சதவீத (சுமார் 60 ஆயிரம் சதுர கி.மீட்டர்) பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தடைவிதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு, மிக அவசியமான ஒன்று என்கிற அதே வேளையில், அந்த உத்தரவு எந்த அளவுக்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் என்கிற கேள்வியும் எழுகிறது. அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களுக்குப் புகலிடமாகத் திகழ்வதில், உலகிலேயே இரண்டாவது முக்கியத்துவமான பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை. அதில் இயற்கைச் செழுமைமிக்க பகுதிகளை, […]

December 5, 2013 admin
இந்தியாவை ஜெயிக்க முடியாதுங்கோ!- பாக். கிற்கு பிரதமர் சவால்! Running News

இந்தியாவை ஜெயிக்க முடியாதுங்கோ!- பாக். கிற்கு பிரதமர் சவால்!

காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என்றும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்ததையுடுத்து என் வாழ்நாளில், இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியா பிரதமர் மன்மோகன்சிங் சவால் விட்டுள்ளார். நேற்று காஷ்மீரின் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் ஆசாத் ஜம்மு-காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத்தில் பாக்., பிரதமர் […]

December 4, 2013 admin
விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா? Running News

விலை போகும் கல்வி குறித்து விழித்து கொள்ள வேண்டாமா?

அண்மையில்உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், சர்வதே தரத்தில் உயர்கல்வி அளிக்கும் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், கல்வி வணிகச் சந்தையாக மாறி போனதே முக்கியமான காரணமாகும். ஒரு கல்வி நிறுவனம் மற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வேறுபடலாம்; உயர்வும் கொள்ளலாம். ஆனால், இத்தகைய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பலர் தங்களுக்கு ஏற்ற பணியை பெற்றார்களா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். மேலும், சில கல்வி […]

December 3, 2013 admin
காவல் அதிகாரி கணகற்றவர்களை சமாளிக்க வேண்டும்! Running News

காவல் அதிகாரி கணகற்றவர்களை சமாளிக்க வேண்டும்!

“திரும்ப திரும்ப சொல்லியாகிவிட்டது யாரும் கேட்பதில்லை ஆதலால் மீண்டும் துவக்கத்திலிருந்து’ என்றார் பிரஞ்சு சிந்தனையாளர் ஆந்ரே கிடே. சீராக அமல்படுத்தாதலால் பல பிரச்னைகள் தொடர்கின்றன. புதிய ஆரம்பம் பழைய பிரச்னைக்கு. அதுதான் “முதல் தகவலறிக்கை காவல் நிலையத்தில் தாக்கல் செய்தவுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என்ற உச்சநீதிமன்ற உத்தரவு. குற்றவியல் சட்டம் பிரிவு 154இன்படி காவல் நிலையங்களில், விசாரணை செய்யக்கூடிய புகார்கள் கொடுக்கப்பட்டால் உடனே பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். வாய்மொழி புகாரை எழுத்து […]

December 2, 2013 admin
பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம் Running News

பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம்

“குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை. *எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை. *குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். *தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும். *உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில […]

November 30, 2013 admin
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு Running News

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

“திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல.”என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது.இது தொடர்பாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “திருமணம் செய்து கொள்வதோ, செய்து […]

November 29, 2013 admin
குழந்தைகள் திரைப்படம் என்றால் எவை? Running News

குழந்தைகள் திரைப்படம் என்றால் எவை?

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா முடிந்த சில நாள்களிலேயே கோவாவில் 44ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா தொடங்கிவிட்டது. குழந்தைகள் திரைப்படவிழாவைக் காட்டிலும் கோவா திரைப்பட விழாதான் அதிக கவனம் பெற்றது. இரண்டிற்கும் கொஞ்சம் இடைவெளி தந்திருக்கலாம். குழந்தைகள் திரைப்பட விழாவே முக்கியத்துவம் பெறாத நிலையில், தங்கயானை பரிசு பெற்ற படங்களின் விவரங்கள்கூட சரிவர ஊடகங்களில் பேசப்படாத நிலையில், சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்-இயக்குநர் […]

November 28, 2013 admin
உடனடி செய்திகள்