Exclusive
HR&CE அறங்காவலர் தெரிவுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி: அரசுக்கு நன்றி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக, தகுதி வாய்ந்த நபர்களைத் தெரிவு செய்யும் மாநில அளவிலான உயர்மட்டக் குழு உறுப்பினராக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் திருமதி அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார். இத்துடன், ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களுக்கான அறங்காவலர் பெயர்ப்பட்டியலைத் தயாரிக்கும் முக்கியப் பொறுப்பும் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அரசுக்கு மனமார்ந்த நன்றி இந்த முக்கிய நியமனத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு […]