32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 239 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 239)
உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம! Running News

உலக அளவில் பெரிய நிர்வாகச் சீர்கேடுடைய பொது விநியோகத் திட்டம!

தனது மக்களுக்குத் தேவையான அளவு உணவை வழங்காத நாடு எனப் பெயர் பெற்றது இந்தியா. எஃப்.ஏ.ஓ. எனப்படும் உணவு மற்றும் விவசாய இயக்கம் தனது 2006-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இந்தியாவில் 21 கோடியே 20 லட்சம் மக்கள் தரமான உணவை பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் பல வருடங்களாக பொது வினியோகத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் நடைமுறை இருந்தபோதிலும், அந்த திட்டம் சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால், பல முறைகேடுகள் […]

November 4, 2013 admin
மூன்றாவது அணியால்தான் மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தன! Running News

மூன்றாவது அணியால்தான் மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தன!

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் காரியத்தில் ஈடுபட்டுவருகின்றன. நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதும் வகுப்புவாத எதிர்ப்பு வேள்வியில் தங்கள் வாழ்க்கையை முற்றாக அர்ப்பணித்துவிட்டவர்கள் சிறுபான்மையினர் நலன் காக்க நவீன குருúக்ஷத்திரத்தில் வந்து குவிந்துவிட்டனர். ஒரு பக்கம் “மதச்சார்பின்மை’ என்ற மந்திரகோலை மகிழ்ச்சியுடன் காங்கிரஸ் கையில் பிடித்துக் கொண்டது. மறுபக்கம் வகுப்பு வெறியை வளர்த்தெடுக்கும் சக்திகளை முறியடிக்க நம் காம்ரேடுகள் சுத்தியலும் அரிவாளும் சுமந்தபடி […]

November 3, 2013 admin
தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்! Running News

தீபாவளி திருநாள் -நம் வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

இருளை அகற்றி ஒளி தரும் உன்னத பண்டிகை ‘தீபாவளி’ திருநாள். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள், சமணர்களும் தீபாவளியைக் கொண்டாடுவது இதன் கூடுதல் சிறப்பம்சம். அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆண்டு முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடியிருப்பது, நமது கலாச்சார பெருமையை பறை சாற்றுவதாக உள்ளது.இந்நிலையில் நம் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மனப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறோம். மகிழ்ச்சிகரமான இந்த நன்நாளில் தமிழக மக்களுக்கும், உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கும் இதய […]

November 2, 2013 admin
படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!. Running News

படேல் பாஜக-வின் சொத்தும இல்லை..காங்கிரஸின் எதிரியும் அல்ல!.

இப்போது சர்தார் வல்லபபாய் படேல் தலை உருளுகிறது.”படேல் பிரதமராக பதவியேற்றிருந்தால், நேருவைவிட சிறப்பாக செயல்பட்டிருப்பார்’ என்று மோடி பேசியிருப்பது இன்றைய அரசியல் சூட்டில் புதிதாக மிளிர்கிறதே தவிர, இது 1950 களிலேயே, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா உள்பட பலர் கூறிய கருத்துதான். அதேயே இப்போது நரேந்திர மோடியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றைய அரசியல் மேடையில் அது மதிப்பூட்டல் பெறுகிறது. இந்த வார்த்தைகளை நரேந்திர மோடி வேறு ஏதேனும் ஒரு மேடையில் […]

November 1, 2013 admin
சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவதா? Running News

சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவதா?

காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என புது தில்லியில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.அதாவது இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனவும் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மிரட்டும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு நாட்டின் தூதர் எந்த வரம்பிற்கு உட்பட்டுப் பேச வேண்டுமோ அந்த வரம்பைத் தாண்டி அவர் பேசியுள்ளார். இந்தியாவின் தலைநகரிலேயே […]

October 31, 2013 admin
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,வஞ்சனை சொல்வாரடீ!- Running News

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,வஞ்சனை சொல்வாரடீ!-

அடுத்த ஆண்டு இந்தியாவின் பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரசும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதாவும் மற்ற கட்சிகளைவிட அதிக முனைப்புடன் தயாராகிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் வேட்பாளராக, நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்த முனைகிறது ஆளுங்கட்சியான காங்கிரஸ். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில், சுதந்திரம் […]

October 30, 2013 admin
காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்? Running News

காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்?

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக இலங்கை பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. நேற்று இலங்கையிலிருந்து வெளியாகும் “சிலோன் டுடே’ பத்திரிகை, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், “”இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டின் தொடக்க விழாவில் மட்டும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.நிகழ்ச்சி முடிந்ததும், இலங்கை உள்பட எந்த நாட்டுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபடாமல் உடனடியாக அவர் புதுதில்லி […]

October 29, 2013 admin
‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’-By அ போ இருங்கோவேள், Running News

‘பாதுகாப்பான தீபாவளியே – ஆனந்தமான தீபாவளி.!’-By அ போ இருங்கோவேள்,

தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்!. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். அதனாலே தீபாவளி ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக […]

October 28, 2013 admin
பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஏற்பட சைக்கிள் ஓட்டுவோம் Running News

பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஏற்பட சைக்கிள் ஓட்டுவோம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சைக்கிள்களின் பயன்பாடு பெருமளவில் இருந்தது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் அதிகளவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். குறிப்பிட்ட தொலைவுக்கு சென்றுவர எளிமையான, சிறந்த வாகனமாக சைக்கிள் விளங்கியது. சைக்கிள்கள் செல்வதற்கென்றே சாலைகளில் தனிப்பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சாலைகளில் சைக்கிள்களை பயன்படுத்துவோரைக் காண்பதே அரிதாக உள்ளது. அதற்கு மாறாக பைக், ஸ்கூட்டர், மொபெட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு பன்மடங்கு பெருகியுள்ளது. மேலும் அதிகரித்து வருகிறது. கார் மற்றும் […]

October 27, 2013 admin
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரசாரமா?தேர்தல் ஆணையம் கிடுககிபிடி! Running News

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரசாரமா?தேர்தல் ஆணையம் கிடுககிபிடி!

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும் வாக்காளர்களை கவர்வதற்காக இணையதளங்கள், சமூக வலைதளங்களிலும் கட்சிகள், வேட்பாளர்கள் விளம்பரம் செய்கின்றனர். இதை வரன்முறைப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதிலும் அண்மையில் நகர்ப்புற வாக்காளர்களில் 37% பேர் பெரும்பாலான நேரங்களில் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் அதாவது ஆன்லைன்வாசிகள் என்று கூகுள் இந்தியாவின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து மாநில […]

October 26, 2013 admin
உடனடி செய்திகள்