‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தால் சிந்திய ரத்தம்,வியர்வை & கண்ணீர் – கமல் ஓப்பன் லட்டர்!

‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தால் சிந்திய ரத்தம்,வியர்வை & கண்ணீர் – கமல் ஓப்பன் லட்டர்!

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரங்களில் நடித்த ‘தசாவதாரம்’ வெளியாகி டீன் ஏஜ் ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களுடன் சில நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், ‘நேரம்’, ‘பிரேமம்’ பட டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் “படம் இயக்குவதில் ‘தசாவதாரம்’ பிஹெச்டி போன்றது என்றால், ‘மைக்கேல் மதன காமராஜன்’ டிகிரி கோர்ஸ் போன்றது. ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டிருந்தார். அப்போ அதுக்கு பதிலளிச்சிருந்த கமல்ஹாசன், “நன்றி அல்ஃபோன்ஸ் புத்திரன். சீக்கிரம் சொல்கிறேன். உங்களுக்கு எந்த அளவுக்கு கற்றுக்கொள்ள உதவும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் நிறைய கத்துக்கிட்டேன். நான் சொன்ன மாதிரி அது ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் கழித்தும் இதுகுறித்துப் பேசுவது எனக்கு புதிய பாடங்களை கற்றுக்கொடுக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.தான் உறுதியளித்தது போலவே இப்போது, கமல் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படம் குறித்து விரிவாக பேசி இருக்கார். இது குறிச்சு நம்ம கட்டிங் கண்ணையா நம்ம ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்-மிற்காக அனுப்பி இருக்கும் சிறப்புக் கட்டுரை இதோ:

’கத கேளு கத கேளு… நிஜமான கத கேளு… சுவையோடு சுகமாக உருவான கத கேளு…’ என்ற இளையராஜாவின் கணீர் குரலோடு ஆரம்பித்தது, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படம். வசனங்களின்றி பாடலினாலே படத்தின் கதையை உணர்த்திய அந்த நகைச்சுவை முழுமையாக உணர வைத்த இப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. மைக்கேல், மதன், காமேஷ்வரன், சுப்ரமணியம் ராஜூ எனக் கதாபாத்திரங்கள் நான்காக இருந்தாலும், அதையேற்று நடித்த கமல் என்பவர் ஒருவரே! மைக்கேல் இறுக்க மனமுடையவன். ரௌடி, கேங்ஸ்டர், ஸ்மக்லர். அதற்குத் தகுர்ந்த மாதிரி பிரென்ச் தாடி, கட்டைக் குரல் என நடிப்பிலும் ஒருவித இறுக்கத்தையே வெளிப்படுத்தியிருப்பார். மதன் நிறைய படித்தவர், அறிவாளி. அதனால், கண் பார்வைக் குறைபாடு இருப்பவராகக் காட்டியிருப்பார்கள். காமேஷ்வரனின் பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும், கேரளத்தின் அரவணைப்பில் வாழ்ந்தவன். பேச்சில் பாலக்காட்டு மண் வாசனை. இவருக்குத் தெரிந்ததெல்லாம் அப்பா, சமையல், புகை, வரதுக்குட்டி, அடுப்படி, மளிகைக் கடை… கடைசியாக, திரிபுரசுந்தரி. சுப்ரமணியம் ராஜூ ஆதரவின்றி வாழும் அநாதை. தீயணைப்பு வீரன், பேச்சில் மெட்ராஸ் பாஷை. இந்த நால்வரும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்றாலும், நடிப்பது கமல். இப்படியொரு நல்ல படைப்புக்கு கமலின் நடிப்பு, கதை, திரைக்கதை, கிரேஸியின் வசனம், சிங்கீதம் சீனிவாசராவின் இயக்கம் என ஐந்துமே கைகொடுத்திருக்கும்.

இன்னிக்கு கமல் ஷேர் செஞ்சிருக்கும் அந்தப் பதிவின் சாராம்சம் இதோ,

“இந்தப் படத்தை `மாஸ்டர் கிளாஸ்’ படம் என சொன்னதுக்கு அர்த்தம் நான்தான் அதோட மாஸ்டர் என்பது இல்லை.. இல்லை. இல்லவே இல்லை. அதே சமயம் நம் திரைப்படங்களின் நுணுக்கம் குறிச்சு நான் கற்றுக் கொடுக்க முன் வராததுக்குக் காரணம், கற்றுக் கொடுக்க மிக பெரிய தியாகம் வேண்டும். அது ஒரு தாய்க்கு சமமான பணி. ஆனால், நான் இப்போதும் ஒரு மாணவன். அதுவும் ஆர்வம் குன்றாத மாணவன். இதன் அர்த்தம், நான் ஓர் ஆசிரியரை விட சுயநலவாதி என்று சொன்னாலும் பொருத்தமாகவே இருக்கும். அதனால் மொத்த வகுப்போடு சேர்ந்து நானும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

அதே சமயம், ஒரு வகுப்பில் எனக்கு தெரிந்ததை பகிர்வதில் எந்த உறுதியான நிலைப்பாடும் இல்லை. அப்படி பகிர்வதில் எனக்கு கொஞ்சமும் பதட்டம் கிடையாது. ஆனால் அப்படி எல்லாம் பகிருவதை விட கற்பதில் ஒரு ஆசிரியரை விட என் பசி மிக அதிகம். அதனால்தான் எனக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமாக ஏகப்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். நம் ஜாம்பவான் டைரக்டர்கள் அனந்து, சிங்கீதம் மட்டுமின்றி அய்யா கே.பாலசந்தர் ஆகியோரிடமிருந்து நான் இவ்வளவு கற்றுக்கொண்டதற்கு எனக்கு இருந்த பெரும் பசியே காரணம். இவர்கள் அனைவரும் கற்பித்தல் கலையில் உச்சம் பெற்றவர்கள்.அப்படி எனக்கு இருந்த குருக்கள் அனைவரும் எதாவது ஒரு பாடத்தை அல்லது கல்வியை எனக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் அதே பாணியை நானும் பின்பற்ற முயற்சிக்கிறேன். அதன்படி, எனது கற்றல் செயல்பாட்டின்போது எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முயற்சிக்கிறேன். ஆனால், என்னையும் என் குருக்களையும் விட சிறப்பாக இதுபோன்ற படைப்புகளை நீங்கள் எடுப்பீர்கள் என்று உறுதி அளித்தால் மட்டுமே அது சாத்தியப்படும். இப்போதுள்ள புதிய தலைமுறை இயக்குநர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்ததைக் கண்டு, வரும் காலங்களில் அதனை மிஞ்சும் வகையிலான தங்கள் சொந்த படைப்பாற்றலைக் காட்டி அசத்த வேண்டும்.

நீங்கக் குறிப்பிடும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ பற்றி சொல்வதானால் நகைச்சுவையை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வணிகமாக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள், பல நேரங்களில் கண்ணீர் சிந்த தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை உங்களின் வியர்வை அதற்காக ரத்தமாக கூட மாறலாம். அப்படி செய்தால் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் உங்கள் நகைச்சுவையால் சிரிப்பார்கள். ஒரு கோமாளியைக் கேளுங்கள். சிரிக்க வைக்க படும் வேதனையை அவர் உங்களுக்குச் சொல்வார். எதுவுமே இங்கு எளிதானது கிடையாது. கொஞ்சம் சிம்பிளாக சொல்வதானால் ஒரு பந்தை சும்ம் சமநிலைப்படுத்தினால் உங்களுக்கு கொஞ்சம் கூட கைதட்டல் கிடைக்காது. ஆனால், அதுவே சில தந்திரங்களைப் பயன்படுத்தி பாருங்கள்… உங்களுக்கு கைதட்டல்கள் கிடைக்கும். இதுபோன்ற எல்லாவற்றையும் அறிந்துகொண்டு இன்னும் தைரியமாக இருக்க வேண்டும்” அப்ப்டீன்னு சொல்லி அசர வச்சிருக்கார்a

Related Posts

error: Content is protected !!