காந்திக்குப் பதில் மோடி!- தப்பே இல்லை = காதி கிராம ஆணையம் விளக்கம்!

காந்திக்குப் பதில் மோடி!- தப்பே இல்லை = காதி கிராம ஆணையம் விளக்கம்!

ஐசி வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டுக்கான நாட்காட்டி மற்றும் டைரியில் மகாத்மா காந்திக்கு பதில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் உயர்மட்ட அரசு தகவல்கள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படையற்றவை மற்றும் தேவையற்ற சர்ச்சை,” என்று கூறிஉள்ளது.தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் காலண்டர்கள் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறாமல் எத்தனையோ ஆண்டுகள் வெளியாகி உள்ளது. 1996, 2002, 2005, 2011, 2013, 2013 மற்றும் 2016 -ம் ஆண்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் காலண்டர் அல்லது டைரியில் இடம்பெறவில்லை. காலண்டர்களில் காந்தியின் புகைப்படம் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று எந்த ஒரு விதியும் கிடையாது,” என தகவல்கள் தெரிவித்து உள்ளன. மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக மோடியின் புகைப்படம் மாற்றப்பட்டது என்பது முற்றிலும் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

modi jan 13

காதி கிராம தொழில் ஆணையம் (கேவிஐசி) சார்பில் சுவர் நாட்காட்டி மற்றும் டைரி ஆண்டுதோறும் வெளியிடப்படும். இதில் காந்தி தனது இடுப்பில் மட்டும் ஒரு உடையை உடுத்திக்கொண்டு ராட்டையை சுழற்றுவது போன்ற படம் இடம்பெறுவது வழக்கம். மிகவும் பிரபலமான இந்தப் படம் அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது.ஆனால் இந்த ஆண்டுக்கான நாட்காட்டி, டைரியின் முகப்பில் காந்திக்கு பதிலாக, மோடி குர்த்தா பைஜாமா உடை அணிந்தபடி நவீன ராட்டையை சுழற்றுவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த காதி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதையடுத்து, மும்பையின் வைல் பார்லே பகுதியில் உள்ள கேவிஐசி தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், உணவு இடைவேளையின்போது வாயில் கருப்பு துணியைக் கட்டியபடி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஒரு அதிகாரி (கேவிஐசி) கூறும்போது, “கடந்த ஆண்டு மோடியின் படம் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டது. இப்போது முற்றி லும் காந்தியின் படம் அகற்றப் பட்டுள்ளது. காந்தியின் சிந்தனை, தத்துவம், கொள்கைகளை அரசு கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணித்து வருவது கவலை அளிக்கிறது” என்றார்.

ஆனால் இதுகுறித்து கேவிஐசி தலைவர் வினய் குமார் சக்சேனா கூறும்போது, “இதில் வழக்கத்துக்கு மாறாக ஒன்றும் இல்லை. கடந்த காலத்திலும் இதுபோன்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் காந்திஜியின் தத்துவம், சிந்தனை மற்றும் கொள்கையை அடிப்படை யாகக் கொண்டு கேவிஐசி செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஆன்மாவாக அவர் விளங்குகிறார். எனவே காந்தியை புறக்கணிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.மேலும் பிரதமர் மோடி நீண்ட காலமாக காதி உடை அணிகிறார். அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகிறார். இதன் மூலம் காதியின் மிகப்பெரிய விளம்பரத் தூதராக விளங்குகிறார். அவரது ‘மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட திட்டங்களும் கேவிஐசி கொள்கையுடன் ஒத்துப் போகிறது” என்றார்.

அத்துடன் மோடி இளைஞர்களின் ஐகானாக திகழ்கிறார், இதற்கு உதாரணமாக காதி பொருட்களின் புகழானது அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 50 கால ஆட்சியில் காதி பொருட்களில் விற்பனையானது 2-7 சதவிதத்திற்கு முடங்கி கிடந்தது, இப்போது கடந்த இரு வருடங்களில் 34 சதவிதமாக உயர்ந்து உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

Related Posts

error: Content is protected !!