ஆங்சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை: மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு!

ஆங்சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை: மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு!

ர்வதேச அளவில் உயரிய அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி மீது, 15 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியதுடன், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மியான்மர் நாட்டில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 76 வயதான ஆங்சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அரசை, அந்நாட்டு ராணுவம் கலைத்தது. இதனைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சாங் சூகியும் கைது செய்யப்பட்டார்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது, முறைகேடாக வாக்கி டாக்கி வாங்கியது, மக்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டியது மற்றும் ஊழல் என அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இதில், அரசியல் தலைவர் ஒருவரிடம் இருந்து தங்கம் மற்றும் பலஆயிரம் டாலர்களை லஞ்சமாக பெற்றதாக சூகிக்கு எதிரான ராணுவ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைகள் முடிந்துள்ளது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பை இன்றைய தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், ஊழல் வழக்கில் ஆங்சான் சூகி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!