கேரளம் ஆனது -கேரளா-சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது!

கேரளம் ஆனது -கேரளா-சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது!

ம் அண்டை மாநிலமான கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் அந்த மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மலையாளத்தில் கேரளம் என்பது பொதுவாக வழக்கத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், ஆவணங்களில் குறிப்பாக ஆங்கிலத்தில் கேரளா என குறிப்பிடப்படுகிறது. எனவே, மாநிலத்தின் பெயரை மலையாள வழக்கப்படி கேரளம் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மாநில அரசு, பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறது.

கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கேரளாவை ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாநிலத்தின் பெயரான கேரளா என்பதை ‛கேரளம்’ என பெயர் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அரசியல்சாசனம் மற்றும் அரசு ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் ‛கேரளம்’ என மாற்றம் செய்ய மாநில அரசு விரும்பியது.

இதற்காக கேரளாவின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில், முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார்.அந்த தீர்மானத்தில், “மலையாளத்தில் நம் மாநிலத்தின் பெயர் கேரளம். 1956, நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நவம்பர் 1ம் தேதி கேரள தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்றுபட்ட கேரளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்தே மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை கேரளா என குறிப்பிடுகிறது. அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ், மாநிலத்தின் பெயரை கேரளம் என திருத்தம் செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுதந்திரத்திற்கு பிறகு 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கேரளா உருவானது. பெரும்பாலான மலையாளிகள் வசித்ததால், கேரளாவின் ஆட்சி மொழியாக மலையாளம் உள்ளது. மலையாள மொழியில் கேரளம் என அழைக்கப்படும் மாநிலம், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் கேரளா என்றே அழைக்கப்படுகிறது. அரசியலைமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றே உள்ளது. இதனால், மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற வேண்டும் என அம்மாநிலத்தின் சார்பில் நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தனர். . இதைக் கருத்தில் கொண்டு மாநில அரசு, பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறது.

மேலும், மாநிலத்தின் பெயரை கேரளம் என அங்கீகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இந்த தீர்மானம் கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு, எட்டாவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!