சிட்டி வங்கி இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு!

சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான சிட்டி குழுமம் தன் சேவைகளை மறுகட்டமைப்பு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா உள்பட 13 நாடுகளை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், சீனா, இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் நுகர்வோர் வங்கி சேவைகளை நிறுத்த சிட்டி வங்கி முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் 3வது பெரிய வங்கியாக திகழும் சிட்டி பேங்க், இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 19,000 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. இந்தியாவில் இருந்து வெளியேறப்போவதாக சிட்டி பேங்க் அறிவித்துள்ள நிலையில் அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிட்டி வங்கி இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அஷு குல்லார் அறிக்கை இது:
மணி கண்ட்ரோல் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியா உட்பட 13 நாடுகளில் இருந்து சிட்டி வங்கி வெளியேற இருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் 3வது பெரிய வங்கியாக திகழும் சிட்டி பேங்க், இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 19,000 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. நுகர்வோர் வங்கி வணிகத்தில் கிரெடிட் கார்டு, சில்லறை வங்கி சேவை, வீட்டுக் கடன், நிதி மேலாண்மை போன்ற சேவைகளை அளித்து வருகிறது. இந்தியாவில் சிட்டி வங்கிக்கு 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர், 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள் 2.9 மில்லியன் அதாவது சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தற்போது இந்தியாவில் இருந்து சிட்டி வங்கி வெளியேற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எங்கள் வங்கி சேவைகளை நாங்கள் நிறுத்தவில்லை, வெளியேற மட்டும் தான் செய்வோம். நடப்பு வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் உடனடியாக ஏற்படாது எனவும் இந்தியாவில் உள்ள்ள தங்கள் ஊழியர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏதும் இல்லை எனவும் சிட்டி வங்கியின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாங்கள் இப்போது இந்திய நுகர்வோர் வணிக பிரிவுக்கு வாங்குபவரைத் (buyer) தேடுவோம், மேலும் தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களையும் நாடுவோம் எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர்