குரல் கொடுங்கள், பரப்புங்கள் தோள்கொடுங்கள், பங்களியுங்கள் தோழர்களே…!
![குரல் கொடுங்கள், பரப்புங்கள் தோள்கொடுங்கள், பங்களியுங்கள் தோழர்களே…!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2023/08/368291313_10218284902713995_3542925969739559778_n.jpg)
மாரிமுத்து மகாலட்சுமி இந்த இரு பெயர்களும் கடந்த 16 நாட்களுக்கு மேலாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்… இவர்கள் இருவரும் நம்மிடையில் இப்போது இல்லை…ஆம் இவர்களை இச்சாதிய மனோநிலை சமூகம் தூக்கிலேற்றி கொலை செய்துவிட்டது…!
மாரிமுத்துவும் மகாலட்சுமியும் செய்த பாவம் அக்கிரமம் பெருங்குற்றம் எல்லாமே ஒன்று தான் …!?
காதல்…..!
இதற்காக இச்சமூகம் அவர்களுக்கு வழங்கிய பெருங்கொடை மரணம்… காதல் – திருமணம் – குழந்தைகள் – பேரக்குழந்தைகள் என்கிற இவர்களின் முழுவாழ்க்கையையும் வெறும் சாதி என்கிற ஒற்றை பதத்தை வைத்து முழுவதுமாக அழித்திருக்கிறது இச்சமூகம்…!
உயர்சாதி என்னும் வெற்று பிதற்றலை முன்வைத்து மகாலட்சுமியின் வீட்டார் இந்த திருமணத்தை எதிர்த்து இவர்களுக்கு இப்பூமியில் வாழ தகுதியில்லை என்னும் தீர்ப்பையும் எழுதியுள்ளனர்…!
இது தற்கொலை இல்லை கொலை தான் என்கிற போதுமான ஆதாரம் இருந்தும் காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது… காவல்துறையின் இந்த போக்கை கண்டித்து கடந்த பதினைந்து நாட்களுக்கு மேல் மாரிமுத்துவின் குடும்பத்தாரும், சனநாயக முற்போக்கு இயக்கங்களும் சேர்ந்து தேனி மற்றும் பெரியகுளத்தில் போராட்டங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள்.!
மாரிமுத்து மகாலட்சுமியின் ஊரான கும்பக்கரை சாலை, காந்தி நகரில் இன்றும் கருப்புக்கொடிகள் பறந்துகொண்டு இருக்கின்றன. தொடர் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்…
மாரிமுத்துவின் பிணமும் பிணவறையில் இருந்தபடியே நீதிக்காக இவர்களுடன் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறது…
இந்நிலையில் மாரிமுத்துவின் குடும்பம் வேலை இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிவிட்டனர்… வறுமையின் வாயிலில் வாழ்க்கை நடத்தும் அம்மக்கள், தன் மகன் மாரிமுத்து சாவுக்கு நீதிகேட்டுப் போராடும் வழியில், வறுமை அவர்கள் ஊக்கத்தைக் கெடுத்து விடக் கூடாது என்று நினைக்கிறோம்.
நாம் அனைவரும் இவர்களுக்கு செய்யும் உதவி கண்டிப்பாக ஓர் முழு வாழ்க்கையையும் இழந்த மாரிமுத்துவையும் மகாலட்சுமியையும் ஒரு போதும் மீட்டுக்கொடுக்காது,
அனால் மாரிமுத்துவின் குடும்பத்தாரை தொடர்ச்சியாக போராட வைக்கும்…!
மாரிமுத்து மகாலட்சுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கச்செய்யும்…!
மாரிமுத்து குடும்பத்திற்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வது மாரிமுத்து மகாலட்சுமியின் ஆணவக்கொலைக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்திற்கு துணை நிற்பது ஆகும்..
மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு நம்மால் முடிந்த உதவி செய்வோம்…நீதிக்கு துணை நிற்போம்…ஜாதிய மனோநிலையை வேரறுப்போம்…
Gpay no 9944952893
SIVARAMAN RAMAKRISHNAN
பதிவு Aravind
Karapaanpoochi2.0