June 4, 2023

கொரோனா சிகிச்சை : தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப் பட்டோர் விருப்பப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லி யில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக் கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப் பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறித்து தமிழ்அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மாவட்டம் வாரியாக அமைந்துள்ள 110 மருத்துவமனைகளின் விவரம் இதோ:.

New Doc 04-04-2020 12.46.32
New Doc 04-04-2020 12.46.32
New Doc 04-04-2020 12.46.32
New Doc 04-04-2020 12.46.32
New Doc 04-04-2020 12.46.32
New Doc 04-04-2020 12.46.32
New Doc 04-04-2020 12.46.32