நம் நாட்டில் மகிழ்ச்சியான மாநிலம் – மிசோராம்!
இந்தியாவின் “மகிழ்ச்சியான மாநிலமாக மிசோராம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆறு வெவ்வேறு காரணிகள் மாநிலத்தில் மகிழ்ச்சிக் குறியீட்டை அளவிடுவதற்கு பரிசீலிக்கப்பட்டது.

குருகிராமில் உள்ள மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியரான ராஜேஷ் கே பிலானியா நடத்திய ஆய்வின்படி, நாட்டின் “மகிழ்ச்சியான மாநிலமாக” இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறவுகள், வேலை தொடர்பான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள், மதம், உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட ஆறு காரணிகளின் அடிப்படையில் இந்தக் குறியீடு கணக்கிடப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது. இதில் மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுக்கு இடையேயான உறவும் அடங்கும்.
100% கல்வியறிவு பெற்ற இரண்டாவது மாநிலமான மிசோரம், அதன் இளைஞர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட ஒரு தனித்துவமான சமூக அமைப்பைக் கொண்டுள்ளது என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது. மிசோ சமூகத்தில் உள்ள இளைஞர்கள், தங்கள் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், சிறு வயதிலிருந்தே நிதிச் சுதந்திரத்தைத் தொடர முனைகிறார்கள் என்றும், அவர்களிடம் எந்தப் பணியும் தாழ்வானதாகக் கருதப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. மாநிலத்திற்குள் பாலின பாகுபாடு மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது. மிசோரமில் உடைந்த குடும்பங்கள் அதிகமாக இருந்தாலும், அத்தகைய சூழ்நிலைகளில் ஏராளமான ஆதரவு இருப்பது, வேலை செய்யும் தாய்மார்கள் மற்றும் ஆரம்பகால நிதிச் சுதந்திரம் ஆகியவை அவர்களுக்கு கைகொடுக்கிறது. சாதியற்ற சமூகத்தில் வாழும் மிசோரம் இளைஞர்களின் மகிழ்ச்சியில், அவர்களின் வளர்ப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், கல்வியில் வெற்றி பெறுதற்கான பெற்றோர்களின் அழுத்தம் இப்பகுதியில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.


