இங்கிலாந்தில் புலிகள் மீதான தடை நீக்கம் – இலங்கை அரசு மேல்முறையீடு!

இங்கிலாந்தில் புலிகள் மீதான தடை நீக்கம் – இலங்கை அரசு மேல்முறையீடு!

விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இலங்கை அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதுஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து வந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்விதமான பயங்கரவாத செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

இதனை உள்துறை அமைச்சகம் நிராகரித்த நிலையில், Proscribed Organisations Appeal Commission என்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.அந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு ஆணையம் விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என தெரிவித்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்து அரசும், மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பு, சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துபூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து அரசின் முடிவை பொறுத்தே தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என சிறப்பு ஆணையம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீலங்கா அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப் பட்டுள்ளது.முன்னதாக, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“Proscribed Organisations Appeal Commission என்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இலங்கை அரசு மனுதாரராக இல்லை. ஆனாலும், தேவையான ஆவணங்களை வழங்கி வந்தது. இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த வாய்ப்புள்ளதால், மிகவும் நெருக்கமாக இந்த வழக்கு தொடர்ந்து கவனிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததையும் ஸ்ரீலங்கா அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

Related Posts

error: Content is protected !!