இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலை வணக்கம்!

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலை வணக்கம்!

வர்களுக்கு தலையில் ஒன்றும் கிரீடம் வைக்கப்படவில்லை! இவர்களும் தலையில் கொம்பு முளைத்தது போலவும் நடந்து கொள்ளவில்லை. இவர்களையும் சாதாரண அரசு உத்யோகஸ்தராக class B, or Class A service வித் பென்சன் பெனிஃபிட்ஸ் ஆகத்தான் அரசு பார்க்கிறது. இவர்களுக்கும் அதே DA, TA, வேஜ் ரிவிஷன்…. ஒரு தாசில்தாரை அல்லது அரசு ஆசிரியரை எப்படி அரசாங்கம் பார்க்கிறதோ, அதே போலத்தான் இவர்களையும் பார்க்கிறது. இவர்களுக்கென எந்த முன்னுரிமையும் இல்லை!

இவர்களுக்கும் மிலிடரி க்வார்ட்டர்ஸ் போல, பிஎஸ்என்எல் க்வார்ட்டர்ஸ் போல, சிபிடபில்யுடி க்வார்ட்டர்ஸ் போல அடுக்கு மாடி புறாக் குடில்கள்தான் ஒதுக்கப் படுகிறது.

இவர்களுக்கும் மற்ற அரசு ஊழியரைப் போல PF, graduity, festival loan போன்றவைதான். அதே கேஷுவல் லீவ், அதே மெடிகல் லீவ், அதே ஏர்ன்ட் லீவ், என்கேஷ்மென்ட், எல்டிசி, வகையறா!….

இவர்கள் ஜஸ்ட் நினைத்தாலே போதும் நாசா கை நிறைய அள்ளித் தந்து தங்கள் நாட்டுக்கு இழுத்துக் கொள்வார்கள். இவர்கள் அதற்காக ஆசைப் படுவதில்லை, நம்பி நாராயணன் போல!

ஆனால் இவர்களை நாம் தலை வணங்க என்ன காரணம்?

தங்களின் அறிவை வெளிநாட்டிற்கு உபயோகப் படுத்தாமல், இந்தியாவிற்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் இரத்தத்தில் கலந்த தேசிய உணர்வு. இதை எந்த கூத்தாடி நடிகனும் புரிந்து கொள்ள முடியாது. இன்றைக்கு இன்னும் சற்று நேரத்தில் இவர்களால் தரையிறக்கப்பட்ட லேண்டரால், 140 கோடி மக்கள் பெருமைப் பட்டு இருக்கிறோம்!

சாதனை என்பது வெற்றியோ தோல்வியோ அல்ல! முயற்சியே சாதனைதான்! என்றாலும் அடைந்த வெற்றியின் பயன் அளப்பரியது.

அதை பெற க்டைசி சில மணித்துளிகளில் நாடெங்கும் எழுந்த அபரிமிதமான தேசிய உணர்வே இதை எழுத வைத்தது,

மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடமை உணர்வும் அர்ப்பணிப்புமே இவ்வெற்றிக்கு முழுக் காரணம்!

எனவே தலை வணங்குகிறோம் இஸ்ரோ விஞ்ஞானிகளே!

error: Content is protected !!