சாய்னா மறுபடியும் சாம்பியன் பட்டத்தை கெலிச்சிட்டார்!

சாய்னா மறுபடியும் சாம்பியன் பட்டத்தை கெலிச்சிட்டார்!

ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் போட்டியின் இறுதிச்சுற்றில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது இந்திய பேட்மிண்டன் சங்கம்.

சிட்னியில் நடந்து வந்த ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சீனாவின் சன் யூ-வை எதிர்கொண்டார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில், சன் யூ-வை 11-21,21-14, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் சாய்னா நேவால். ஏற்கனவே கடந்த 2014-ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியிலும் பட்டம் வென்றிருந்த சாய்னாவுக்கு இது 2-வது சாம்பியன் பட்டமாகும்.

saina

இதனிடையே சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது ட்விட்டரில் பக்கத்தில், வாழ்த்துக்கள் சாய்னா. பிரம்மாண்டமான வெற்றி. உங்களது விளையாட்டு சாதனையை நினைத்து ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!