சூரியனை ஆராய ஏவப்பட்ட இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்ணில் பாய்ந்தது- வீடியோ!

சூரியனை ஆராய ஏவப்பட்ட இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்ணில் பாய்ந்தது- வீடியோ!

நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 3 -ஐ வெற்றிகரமாக தரையிறங்கி நிலவு ஆராய்ச்சியில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்திய மாபெரும் வெற்றிக்கு பிறகு இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்தகட்டமாக ஆதித்யா எல்-1 மூலம் சூரியன் குறித்த தங்களின் முதல் ஆராய்ச்சி திட்டத்திற்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதற்காக 24 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கப்பட்டது கவுண்டன் முடிந்த இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. சூரியன் – பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1) ஐ சுற்றி வட்டப் பாதையில் விண்கலம் வைக்கப்படும்,

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்பட்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்த உள்ளது. இந்த விண்கலம், சுமார் 400 கிலோ எடை கொண்டதாகும். சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கிருந்தபடி சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை தொடங்க இருக்கும் ஆதித்யா எல்-1, சூரியனை நாள் ஒன்றுக்கு 1,440 புகைப்படங்களை எடுத்தனுப்பும் திறன் கொண்டது.

நாம் சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி (டெலஸ்கோப்) கருவிகள், சூரியனை அருகில் இருந்து பார்ப்பது போன்ற பிரமாண்டத்தை காட்டும். இந்த விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும். ஆதித்யா எல்-1-ன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பதால், அதுவரை இடைவிடாமல் ஆய்வு பணியை மேற்கொள்ளும் என்பது ஹைலைட்.

error: Content is protected !!