ஏர் ஃபோர்ஸ் ஃபிளைட்டைக் காணோம்!

ஏர் ஃபோர்ஸ்  ஃபிளைட்டைக் காணோம்!

சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானம் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

flight jy 22

ஏ.என். 32 ரக விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. இந்த, விமானம் காலை 11.30 மணிக்கு போர்ட் பிளேர் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் கிளம்பிய சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு அற்று போனது. இதனையடுத்து அதிகாரிகள் பதட்டமடைந்தனர். விமானத்தில் 4 மணி நேரம் மட்டுமே பயணிக்கும் அளவுக்கு எரிபொருள் இருப்பதாக தெரிகிறது. விமானம் எங்கே சென்றது. விபத்தில் ஏதும் சிக்கியிருக்கிறதா என்ற கோணத்தில் தேடப்பட்டு வருகிறது.

மாயமான விமானத்தை தேடும் பணியில் கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. 2 விமானங்கள், 4 கடற்படை கப்பல்கள் விமானத்தை தேடி வருகின்றன. விமானத்தை தேடும் பணியில், கடற்படை, கடற்படையுடன், கடலோர காவல்படையும் ஈடுபட்டுள்ளது. சென்னையிலிருந்து 200 கி.மீ., கிழேக்கே, விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது.

Related Posts

error: Content is protected !!