பிரான்ஸ் : வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் திறக்க உத்தரவு!

பிரான்ஸ் : வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் திறக்க உத்தரவு!

கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து பிரான்ஸ் அரசு, வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது.

பிரான்சில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. இருப்பினும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை யும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் பிரான்ஸ் அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. பிரான்சில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 300 பேரை பிடித்திருக்கும் கொரோனா, 29,407 உயிர்களை பறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ‘கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து இன்று முதல் அனைத்து வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது.

22ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறுவர் பள்ளிகள் என அனைத்தும் கட்டாயமாக செயற்பாட்டிற்கு வர உள்ளது. பிரஞ்ச் கயானா, மயோட தீவில் மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வு இல்லை. இன்று முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும். ஜூலை 1 ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளுக்கும் பயணப்பட முடியும்’ என்று தெரிவித்தார்.

error: Content is protected !!