32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2427 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 225 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 225)
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3 Running News

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.தற்போது எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்றவற்றை விளக்கும் விதமாகவே இந்த பத்திரிகை சுதந்திர தினத்தை மே 3 -ம் தேதி கொண்டாடலாமென்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. உலக பத்திரிகை சுதந்திர நாள் (World […]

May 3, 2014 admin
ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள் By கதிர் Running News

ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள் By கதிர்

’ஓட்டு போடுவது அருமை; போடாதவன் எருமை’ என்று எஃப்.எம் ரேடியோவில் விளம்பர வாசகம் கேட்கும்போது ‘ஓவராக இருக்கிறதே’ என தோன்றியது. ஓட்டு சதவீதம் எத்தனை என்று தெரிந்தபோது, ‘எருமைக்கு பதில் வேறு எதோடு ஒப்பிட்டு இருந்தால் ரோஷம் வந்திருக்கும்?’ என்ற கேள்வி எழுந்தது.தேர்தல் கமிஷனும் சரி, ஊடகங்களும் சரி, வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு தள்ளிவிட இயன்றதை எல்லாம் செய்தன. புனிதமான கடமை, உப்பு போட்டு சாப்பிடும் ஒவ்வொருவனும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும், ஓட்டு போடாதவன் இந்த […]

May 1, 2014 admin
“வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை” Running News

“வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை”

வெயில் காலம் வந்துவிட்டது. வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான். மழையை விரும்பும் அளவுக்கு மக்கள் ஏனோ வெயிலை விரும்புவதில்லை. கிராமங்களில் வெயில் காலத்தில் வீட்டுக்கு வீடு கோடைப்பந்தல் போடுவார்கள். கடைவீதிகளும் நீளமாகப் பந்தல் போடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கும். கவிஞர்கள் கூட வெயிலை அதிகமாக வரவேற்பதில்லை. கவிமணிகூட “வெய்யிற்கேற்ற நிழலுண்டு’ என்று நிழலையே போற்றிப் பாடினார். ஆனால் பாரதி மட்டும் விதிவிலக்கு. “வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை’ என்கிறது பாரதியின் வசனக்கவிதையில் வருகிற ஒரு பசுமாடு. இயற்கை […]

April 28, 2014 admin
100  நாள் வேலைத் திட்ட பட்டியலில் அமிதாப், சச்சின், ஐஸ்வர்யா! Running News

100 நாள் வேலைத் திட்ட பட்டியலில் அமிதாப், சச்சின், ஐஸ்வர்யா!

கோவாவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களின் பட்டியலில் பிரபல கிரிக்கெட் வீரர்கள்,பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது பெரும் ச்ர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக இந்த பட்டியலில் அமிர்கான், கபில்தேவ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன..இவர்களுக்கு […]

April 27, 2014 admin
மக்களை விலைக்கு வாங்க முடியாது! By கதிர் Running News

மக்களை விலைக்கு வாங்க முடியாது! By கதிர்

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஏழாயிரம் பறக்கும்படைகள் அமைத்து இரவுபகலாக கண்காணித்தும், வெளிப்படையாக பண வினியோகம் நடப்பதை மட்டுமே தேர்தல் கமிஷனால் தடுக்க முடிந்துள்ளது.ஓட்டுக்கு இத்தனை ரூபாய் வீதம் கணக்கிட்டு மூன்று நாட்களுக்கு முன்பே வீடு வாரியாக வினியோகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது ஒரு கட்சி. பிரசாரம் முடிந்த உடனே வினியோக வேலையை தொடங்கி ஒரே நாளில் முடித்து விடலாம் என திட்டம் போட்டிருந்த கட்சி, எதிர்பாராத இடியாக […]

April 26, 2014 admin
பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – ஆய்வில் தகவல் Running News

பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – ஆய்வில் தகவல்

தற்பொதைய உல்கின் டாப் சமூக வலைதளமான ‘பேஸ்புக்’ மூலம் நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.அமெரிக்காவின் கொலராடோ டென்வர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இந்த ஆய்வு நடத்தி சமீப காலமாக பல விதமான தொடர்புகள் துண்டிக்கப்படுவதை கண்டு பிடித்து உள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கும் பணியிடத்து நண்பர்களின் தொடர்பை அறவே துண்டித்து உள்ளதாகக் தெரிவித்து உள்ளனர். உலகில் இன்று பெரும்பாலோனோர் நாளின் பல மணி […]

April 24, 2014 admin
மோடி காய்ச்சல்! ஆதாயம் யாருக்கு? Running News

மோடி காய்ச்சல்! ஆதாயம் யாருக்கு?

மோடியை பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா அறிவித்ததிலேயே ஓர் உளவியல் உள்நோக்கம் உண்டு. ஊடகங்கள் திரும்பத் திரும்ப ‘பிரதமர் வேட்பாளர், பிரதமர் வேட்பாளர்’ என்று சொல்லும்போது அது பார்வையாளரின் மனதில் ஓர் உள் அழுத்தத்தை உருவாக்குகிறது. அது வாக்குச் சாவடியிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவ்விதம் அது எதிரொலிக்கிறதோ இல்லையோ… பங்குச் சந்தையில் ஏற்கெனவே எதிரொலிக்கத் துவங்கிவிட்டது. அடானி குழுமம் என்பது நரேந்திரமோடியின் டியரஸ்ட் கம்பெனி என்பதை அனைவரும் அறிவார்கள். முந்த்ரா துறைமுகம் மற்று ம் […]

April 23, 2014 admin
சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22 Running News

சர்வதே தேச பூமி தினம்! – ஏப் = 22

சர்வதேச புவிதினம் (சர்வதேச பூமி தினம், உலக பூமி தினம்) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும் உலகளாவிய ரீதியில் புவியின் சூழல் மாசடைவதைக் கருத்திற் கொண்டு முதன் முதலாக ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச் சூழலியல் நிபுணரும் செனட்டருமான கேலோர்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 […]

April 22, 2014 admin
ஊழல் ஒழிக்கப்படுவதன் மூலமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்!. Running News

ஊழல் ஒழிக்கப்படுவதன் மூலமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்!.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 16ஆவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக வரிசையில் நின்று வாக்களிக்கும் காட்சி மகிழ்ச்சியளிக்கிறது. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனநாயகத்திற்கான விழிப்புணர்வும் நம்முடைய நாட்டில் ஏற்பட்டது. இன்றைய சூழலில் அரசியல் என்பது முதல் போட்டு கொள்ளை லாபம் பார்க்கும் ஒரு வியாபாரம் போலவே மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். மகாத்மாகாந்தி, பெரியார் போன்றவர்கள் சமூகப் பணியை ஒரு அறத்தொண்டாகவே கருதினர். […]

April 21, 2014 admin
எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்க லட்சங்கள் செலவிடும் போக்கு! Running News

எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்க லட்சங்கள் செலவிடும் போக்கு!

எல்.கே.ஜி வகுப்பில் குழந்தையை சேர்க்க இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை கேட்கின்றன சில பள்ளிகள். என்னதான் வசதி இருந்தாலும், இந்த அளவுக்கு யார் கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம். ’எத்தனை லட்சம் என்று நாங்கள் கேட்கவே மாட்டோம். இதோ பிடியுங்கள், பிளாங்க் செக். நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்’ என்று அம்மா அப்பாக்கள் சொல்கிறார்களாம். இதை பணக்காரத் திமிர் என்று நீங்கள் சுலபமாக சொல்லி விடுவீர்கள். உற்றுப் பார்த்தால் தெரியும், அவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் அல்ல என்பது. பணம் […]

April 20, 2014 admin
உடனடி செய்திகள்