இலங்கை எழுத்தாளர் சேகன் கருணாதிலக-க்கு புக்கர் பரிசு!

இலங்கை எழுத்தாளர் சேகன் கருணாதிலக-க்கு புக்கர் பரிசு!

டப்பு 2022-ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை இலங்கையை சேர்ந்த எழுத்தாளரான சேகன் கருணாதிலக வென்றுள்ளார். ஆண்டுதோறும் சிறந்த நாவல் படைப்புக்காக வழங்கப்படும் இலக்கிய விருது இது. ‘The Seven Moons of Maali Almeida’ என்ற நாவல் படைப்புக்காக அவர் புக்கர் பரிசை வென்றுள்ளார்.

கடந்த 1990-களில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் தான் இதன் களம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 47 வயதான அவர் எழுதியுள்ள மூன்றாவது நாவல் இதுவாகும். இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள காலே நகரில் பிறந்தவர். நியூசிலாந்தில் படித்து, லண்டன் போன்ற வெளிநாட்டு நகரங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இங்கிலாந்து ராணி கமிலா, அவருக்கு புக்கர் விருதை வழங்கி சிறப்பு சேர்த்துள்ளார். அவருக்கு 50 ஆயிரம் பவுண்டுகள் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 படைப்புகள் இந்த விருதுக்கான பரிந்துரையில் இந்த முறை இருந்தது. இதனை 5 பேர் அடங்கிய நடுவர் குழு பரிசீலித்து வெற்றியாளரை அறிவித்தது.

அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்தா ஆகிய இந்தியர்கள் இந்த பரிசை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!