கன்னிப் பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை! – பீகார் கிராம அதிரடி

கன்னிப் பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை! – பீகார் கிராம அதிரடி

பீகாரில் கிராமங்களில் புதிதல்ல. சிறுமியருக்கு ஆடை கட்டுப்பாடு, பள்ளி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை என அவ்வப்போது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்படுவது போல் அங்குள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது.
bikar women ban phone 26
மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது, சோம்கார். இந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ஜாகீர் அன்சாரி. நேற்று முன்தினம், கிராம பஞ்சாயத்து கூடியது.அதில், ‘திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமியர், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது’ என ஏக்மனதாக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நேற்று பஞ்., தலைவர் அன்சாரி அறிவித்தார்.அதில் ”தடையை மீறி யாரேனும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை அறிந்தால் அவர்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கப்படுவர்” என தெரிவித்தார்.

இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முதல்வர், நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கும் பீம் சிங்கிடம் கேட்டபோது, ”இது போன்ற தடை விதிக்க, யாருக்கும் உரிமையில்லை. பாதிக்கப்பட்ட யாரேனும் புகார் கொடுத்தால் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்,” என்கிறார்.

Bihar panchayat bans cell phones for unwed girls
****************************************************************

A village council in Bihar has banned the use of mobile phones by unmarried girls, said a council member Wednesday.The decision was taken Tuesday evening at a meeting of Somgarh panchayat in West Champaran district.The panchayat also threatened to impose heavy fine on the girls’ families if they violated the diktat, said Zakir Ansari, husband of the village council head.