டிஜிடல் கரன்ஸி என்றால் என்ன? அது எப்படி பிஸிகல் கரன்ஸியில் இருந்து வேறுபடுகிறது?

டிஜிடல் கரன்ஸி என்றால் என்ன? அது எப்படி பிஸிகல் கரன்ஸியில் இருந்து வேறுபடுகிறது?

ம் இந்திய அரசு Nov 1, 2022 முதல் Digital Currency ஐ Pilot Run ஆக ஆரம்பித்துள்ளது. அது ஒரு சரித்திரத்யில் முக்கியமான முடிவு என்றே சொல்லலாம். இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினைகள் பலவற்றிற்கு இது முடிவுகட்டும், அதில் கருப்பு பணம், சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனை என்று பல பயன்கள். தேசத்தை மதிக்கும் நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள்! Digital Currency ஐ புரிந்து கொள்ளுமுன் கொஞ்சம் இப்போது இருக்கு கரன்ஸி பற்றிய அடிப்படை புரிதலும், அதில் இருக்கும் பிரச்சினைகளை பற்றியும் தெரிந்திருந்தல் இன்னும் கூடுதலான புரிதல் கிடைக்கும்.

நான் தென் ஆப்ரிகாவில் தங்க சுரங்கத்தில் வேலை பார்க்கிறேன். என்னிடம் 1 கிலோ தங்கம் இருக்கிறது. நான் இந்தியாவில் வியாபாரம் செய்ய வேண்டும். அதை நான் RBI இடம் கொண்டு கொடுத்தால், அதற்கு இணையான பணத்தை எனக்கு இந்திய கரன்ஸியான ரூபாய் நோட்டுக்களால கொடுக்கிறார்கள். அதை வைத்து வியாபாரம் செய்து லாபம் ஈட்டிவிட்டேன். இப்போது லாப பணத்தை பேங்க் மூலம் என் நாட்டிற்கு அனுப்பிவிட்டேன். தங்கத்துக்கு உண்டான பணத்தை RBI ல் கொடுத்து மீண்டும் தங்கத்தை பெற்று கொள்கிறேன். ஆம். நம் ரூபாய் நோட்டுக்களின் அடிப்படை அப்படித்தான் உள்ளது. ஆனால் அமெரிக்க டாலருக்கு தங்கம் எல்லாம் வாங்க முடியாது, கடவுளிடம்தான் போய் கேட்கவேண்டும்.

இப்படி இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கும் நோட்டுக்கு இணையாக தங்கத்தை வைத்திருக்கும். நாம் அந்த நோட்டுக்களை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்கிறோம். இதில் தற்போது சம்பளம் வாங்கி, கிரிடிட் கார்ட் பில், வீட்டு லோன், கார் லோன் EMI எல்லாம் வங்கியில் இருந்து அப்படியே மாற்றி விடுகிறேன். அது Digital Currency அல்லவா? இல்லை, அது Digital Transaction. அதாவது என் Salary Account SBI Bank ல் இருக்கிறது. நான் வீட்டு லோன் ICICI Bank ல் இருக்கிறது. NEFT மூலம் Transfer செய்துவிட்டேன். நான் பணம் எதுவும் எடுத்து கொடுக்கவில்லை. ஆனால் எனக்கு பதிலாக அந்த நாளின் முடிவில் என் SBI வங்கி லோனுக்கு உரிய Hot Currency ஐ ICICI க்கு ரூபாய் நோட்டுக்களாக சென்று கொடுத்து விடும். ஒரு வேளை எனக்கு அந்த மாதம் வேறு செலவுகள் வந்து விட்டது, அப்போது நான் நினைத்தால் அந்த பணத்தை ATM ல் Cash ஆக எடுத்துக்கொள்ளலாம். அல்லது நானே Cash எடுத்து ICICi வங்கியில் Cash ஆகவே EMI செலுத்தி விடலாம். ஆனால் Digital Currency யில் அந்த பணத்தை ஒருபோதும் Cash ஆக எடுக்கவே முடியாது.

இதனால் என்ன லாபம்?

1️⃣ ரூபாய் நோட்டுக்களை அடிக்க நிறைய செலவு ஆகிறது. உதாரணமாக ₹500 நோட்டு அடிக்க ₹2.57 செலவாகிறது.

2️⃣ அந்த நோட்டுக்கள் சில வருடங்களில் கிழிந்து போய்விடுகிறது. அதனால அதை மீண்டும்.அடிக்க வேண்டிய பராமரிப்பு தேவை உள்ளது.

3️⃣ என்னதான் பாதுகாப்புகள் இருந்தாலும் Counterfeit Currency என்று கள்ள நோட்டுக்களை அடிக்க முடிகிறது. நம்ம பசி கொடுத்த ரூபாய் அடிக்கும் மெஷின்களை வைத்து, பாகிஸ்தான் இந்திய ரூபாய் நோட்டுக்களை கண்டெய்னர், கண்டெய்னராக அச்சடித்து, அதை வைத்தே தீவிரவாதத்தை பரப்பி வாழ்ந்து வந்தது. Demonetization செய்தது முக்கியமாக அதையும் தடுக்கத்தான். அதை செய்தவுடன், பாகிஸ்தான் விரைவில் பிச்சைக்கார நாடாகியது. (இது பற்றி விரிவாக அறிய என் முந்தைய பதிவுகளை பார்க்கவும்)

4️⃣ மேற்சொன்ன உதாரணத்தில் நான் GPay மூலம் என் வீட்டு லோன் கட்டினாலும், அந்த வங்கிகளுக்கு இடையே பணம் 💰 வாகனங்கள் மூலம் பாதுகாப்புடன் எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது. அதற்கு செலவுகள் அதிகமாகிறது.

5️⃣ ரூபாய் நோட்டுக்களை இந்தியாவில்தான் பயன்படுத்த வேண்டும், ஆனால் நாம் அதை வெளி நாடுகளுக்கு எடுத்து செல்கிறோம். அதை முழுவதுமாக தடுக்க முடிவதில்லை.

6️⃣ கருப்பு பணம் என்பதற்கு முக்கிய காரணம் கரன்ஸி நோட்டுக்களே.

7️⃣ கரன்ஸி நோட்டுக்களால் சட்டத்திற்கு உற்பட்ட பரிவர்த்தனை மட்டுமல்ல, கஞ்சா விற்பதும், லஞ்சம் வாங்குவதும் செய்ய முடியும். அதை கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால் பல சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் அதன் மூலமாகவே நடக்கிறது.

8️⃣ வரி ஏய்ப்புகளுக்கு முக்கிய காரணம் ரூபாய் நோட்டுக்களாக இருப்பதால்தான். நான் தங்கம் கார்டில் வாங்கினால் 2.5% GST, ஆனால் கேஷ் ஆல.கொடுத்த து இல்லை எனும்போது, அதை சேமிக்க நாம் நம்மை அறியாமல் கருப்பு பணத்தை ஊக்குவிக்கிறோம்.

9️⃣ பணம் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, கொள்ளை அடிக்க அது அனுமதிக்கிறது.

இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

டிஜிடல் கரன்ஸி எப்படி இருக்கும்?

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுக்களில் ஒரு எண் இருக்கும். அந்த எண் வேறு எந்த நோட்டிலும் இருக்காது, இருக்கக்கூடாது. அதாவது Unique Serial Number. அது போலவே டிஜிடல் கரன்ஸியிலும் ஒரு எண் இருக்கும். அது Encrypt செய்யப்பட்டிருக்கும். அதை RBI பிரிண்ட் செய்யுமுன். அதற்கு இணையான தங்கத்தை தன்னிடம் அடமானமாக வைத்துக்கொண்டு, அந்த டிஜிடல் கரன்ஸியின் கிரிப்டோ கரன்ஸியாக அது வங்கிகளுக்கு கொடுக்கும்.

நமக்கு நாளை ஆபீஸில் சம்பளம் கொடுக்கும்போது அதை Digital Currency ஆக கொடுத்தால் அது கம்பெனியின் வங்கி கணக்கில் இருந்து, நம் அக்கவுண்டிற்கு வந்து சேரும். அதாவது எனக்கு சம்பளம் ₹8850 என்றால் நான்கு ₹2000 நோட்டுக்களும், ஒரு ₹500 நோட்டு, ஒரு ₹200 நோட்டு, ஒரு ₹100 நோட்டு, ஒர் ₹50 நோட்டு என்ற Encrypt செய்யப்பட்ட கிரிப்டோ நோட்டுகள் என் கணக்கில் வந்து சேரும். அதை நான் ICICi வங்கிக்கு EMI கட்டினால், அதற்கு இணையான Digital Currency அந்த வங்கிக்கு RTGS, NEFT போன்ற ஏதாவது ஒரு வகையில் RBI மூலமாக பணம் மாறிவிடும். அல்லது நேரடியாக CBDC மூலமாக அது நடக்கலாம். ஒரு வேளை சில்லறை கொடுக்க வேண்டும் என்றால் என் வங்கியே அதற்கு இணையான சில்லறை நோட்டுக்களை என் கணக்குக்கு மாற்ற அனுமதிக்கும்.

ஒரு வேளை நான் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அதற்கு பணம் கொடுக்க எனது டிஜிடல் கரன்ஸியை பயன்படுத்தலாம். அந்த ஹோட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கில் அது போய் சேறும். இங்கே இந்த டிஜிடல் கரன்சிக்கு எனக்கு வங்கி கணக்கு தேவையில்லை என்கிறார்கள். அப்படி இருந்தால் RBI யே எனது வங்கியாக செயல்படும். இங்கே RBI க்கு பதிலாக CBDC (Central Bank of Digital Currency) எனும் அமைப்பு நமது வங்கியாக செயல்படும். அந்த டிஜிடல் கரன்ஸி என்பது எங்கேயும் பிஸிகலாக ஒரு போதும் பயன்படுத்த முடியாது. அதன் மூலம் மேற்சொன்ன 9+ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நாளை ஒரு அமைச்சருக்கு அரசு வேலை வாங்க காசு கொடுக்க வேண்டுமெனில் டிஜிடல் கரன்ஸியில் கொடுத்தால் மாட்டிக்கொள்வார்கள். அப்போது தங்கம் போன்ற பொருட்களைத்தான் கொடுக்க வேண்டும் என்பதால் அது எளிதல்ல.

இப்போதைக்கு Wholesale CBDC என்ற பெரிய நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்போகிறது. அதை Pilot Run ஆக நவம்பர் 1, 2022 முதல் தொடங்கி இருக்கிறார்கள். இது முடிந்தபின், அடுத்த Retail CDBC வரும்போது நம்மைப் போன்றவர்கள் பயன்படுத்தலாம். நமக்கு முதலில் பாதி சம்பளம் Physical Currency யாகவும், மீதியை Digital Currency ஆகவும் என்பது போல கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் Digital Currency க்கு மாற்றி விடுவார்கள். கடைசியில் ஒரு நாள் இனிமேல் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்வார்கள். அப்போது நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை RBI அல்லது CDBC இடம் கொடுத்து அதற்கு இணையான Digital Currency ஐ நம் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும். சரி,

நமக்கு ஓகே, ஊரை ஏய்த்து உலையில் போட்டு மூட்டை மூடையாய் ₹2000 நோட்டு கட்டுக்களை வைத்திருகிறானே. அவன் என்ன செய்வது? அவன் அந்த பணத்திற்கான Source அதாவது Legal ஆன வருமானத்தை, கடந்த கால வருமான வரி சான்றிதல் மூலம் அதை மாற்ற முடியும். வழி இல்லாதவன் ஏதாவது தங்கம், வெள்ளி என்று வாங்க வேண்டும். அல்லது ஒரு நாள் அந்த பணமெல்லாம், பண மதிப்பிழப்பிற்கு பின்பு குப்பையானது போல போய் விடும். இதுவரை 10+ நாடுகள் தங்கள் கரன்ஸியை டிஜிடலுக்கு மாற்றி உள்ளார்கள். 50+ நாடுகள் நம்மைப்போல Pilot Run ல் உள்ளார்கள், அதில் ரஷ்யாவும் ஒன்று. இதுவரை 12 நாடுகள் முயற்சி செய்து தோல்வியும் அடைந்துள்ளது.

இந்த Digital Currency என்பது Bitcoin போல Encrypt செய்யப்பட்ட எண்களை கொண்டது. அதன் BlockChain மூலம் அதன் ஆதியும் அந்தமும் அறிய முடியும் என்பதால் ஏமாற்றுவது சிரமம். நம் இந்திய அரசின் Digital Currency ஐ e₹ என்ற குறியீட்டின் மூலம் வேறு படுத்துகிறார்கள். ஆனால் இதுவும் Bitcoin என்பதும் வேறு வேறு. நான் இன்று e₹10000 வாங்கினால் அது பத்து வருடம் கழித்தும் அதே e₹10000 ஆகத்தான் இருக்கும். ஆனால் Bitcoin என்பது மேலே ஏறவோ, இறங்கவோ செய்யும். அது மட்டுமல்ல, அது எந்த அங்கீகரிக்கப்பட்ட நாடுகளும் அதை ஏற்கவில்லை என்பதால் அது Illegal Currency. ஆனாலும் Digital Currency ஐ பொதுவாக Crypto Currency என்றுதான் சொல்கிறார்கள். ஐ நா சபையின் கணக்கின்படி 2021 ல் 7.3% இந்தியர்கள் Crypto Currency வைத்திருந்தார்கள் என்கிறது. அது BitCoin போன்ற சட்டத்திற்கு புறம்பானவை.

எனவே இது நடந்து முடிந்தால் கருப்பு பணம் எல்லாம் பெரியளவில் இருக்காது. மோடி என்னத்தை கிழித்தார் கருப்பு பணத்தை தடுக்க என்று கேள்வி கேட்பவர்களுக்கு, இது புரிந்தாலே காய்ச்சல் வரலாம், முதுகுவலியும் கூட வரலாம். ஊழல், கருப்புப்பணம், லஞ்சம், திருட்டு என்று எல்லாம் நம் கேன்சர் நோயாக இருந்தது. அதற்கு ஒருமருந்து இந்த Digital Currency என்பதுபெரிய அளவில் உதவும் என்றே சொல்லலாம். வரி ஏய்ப்புலள் பெரிய அளவில் தடுக்கப்படும். சடட்டத்திற்கு புறம்பான பண பரிவர்த்தனை மிகப்பெரிய அளவில் சரியும்.

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!