சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர் ஆர்.என். ரவி!- வீடியோ!

சென்னை மெரினாவில் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர் ஆர்.என். ரவி!- வீடியோ!

பாரத திருநாட்டின் 73வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என். ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து முப்படை அணிவகுப்பு மரியாதை மற்றும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

ஆண்டு தோறும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகள்,, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் திரளாகப் பங்கேற்பார்கள்.

தற்போது நிலவும் கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும் போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டில் கவர்னர் ரவி தேசியக் கொடியேற்றியது இதுவே முதல்முறையாகும்.

சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றார்.

முன்னதாக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன.

தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறப்பிக்கும் வகையில் ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி ஆகியோரின் சிலைகள் இடம் பிடித்திருந்தன.

சுதந்திரத்திற்காகப் போராடிய வேலுநாச்சியார், குயிலி, கட்டபொம்மன், பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் ஒண்டிவீரன் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றிருந்தது. மருது சகோதரர்கள் வழிப்பட்ட காளையார் கோவில் கோபுரம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.

பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சுதந்திரப் போராட்டம், சீர்த்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர்களை போற்றும் ஊர்தி இடம்பெற்றது.

பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், கக்கன், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், வ.வே.சு.ஐயர், காயிதே மில்லத், ஜே.சி.குமரப்பா ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றிருந்தன.

கொரோனா தொற்று காரணமாக சென்னையில் குடியரசு தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

error: Content is protected !!