உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வருகிறது?!-ரஷ்ய அதிபர் புதின் யோசனை!

உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வருகிறது?!-ரஷ்ய அதிபர் புதின் யோசனை!

க்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில், ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் விரைவாக போரை முடிவுக்குக் கொண்டு வரவே ரஷ்யா விரும்புவதாக அதிபர் புதின் கூறியுள்ளார்.

ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா, உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்துகிறது என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய புதின் கூறும்போது, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. விரைவாக போர் முடிவுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தவே நாங்கள் முயலுகிறோம். எல்லா மோதல்களும் ஏதோ ஒரு வகையில் அல்லது பேச்சு வார்த்தையில் முடிவடைகின்றன. நம்முடைய எதிரிகள் எவ்வளவு வேகமாக புரிந்து கொள்ளுகிறார்களோ அவ்வளவு வேகமாக மோதல் முடிவுக்கு வரும் என்று கூறினார்.

போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உக்ரைனுக்கு சுமார் 1.8 பில்லியன் டாலர் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!