32°C

Tag: <span>violence</span>

சர்வதேச ஆண்கள் தினம்! Exclusive

சர்வதேச ஆண்கள் தினம்!

1999-ஆம் ஆண்டு மேற்கிந்திய வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் மறைந்த தனது தந்தையின் நினைவாக நவ.19 தினத்தை சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தேசத்தின் பிரசித்தி பெற்ற இருவேறு கால்பந்து அணிகள் இணைந்து ஃபிஃபா உலகக்கோப்பைக்கு தயாராகும் தினத்தை, ஆண்களின் தினத்தோடு கோர்த்து பிரபல்யப்படுத்தினார். அங்கே பற்றிக்கொண்ட ஆண்கள் தினம் விரைவில் சர்வதேச ஆண்கள் தினத்துக்கான அங்கீகாரத்தையும் பெற்றது.சர்வதேச ஆண்கள் தினத்தில், வளர்ந்த ஆண்கள் மற்றும் வளரும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுமாறு […]

November 19, 2024 admin
உலக வறுமை ஒழிப்பு நாள்! Exclusive

உலக வறுமை ஒழிப்பு நாள்!

வறுமை என்பது உணவு, உடை ,உறைவிடம் ,பாதுகாப்பான குடிநீர், மருத்துவம், சுகாதாரம், கல்வி கற்கும் வாய்ப்பு , பிற குடிமக்களிடம் வாழ்க்கை தரத்தை இழந்த நிலை போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள். பட்டினியும், வன்முறையும் வறுமைக்கு வழிவகுக்கிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி போன்ற கொடிய நோய்களை விட வறுமையினால் மரணமடைந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். உலகில் 87 கோடி மக்கள் உணவின்றி வறுமையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் “வறுமையே உனக்கு […]

October 17, 2024 admin
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்! Exclusive

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம்!

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று கடைபிடிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் செல்லப்படுபவர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் குறிக்கப்படுகிறது. கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் போன்ற துன்பகரமான வேலைகளுக்கு பெண்களையும் குழந்தைகளையும் கூட சுரண்டுவது ஆள் கடத்தல் ஒரு குற்றம் என்பதை மற்றவர்களுக்குக் கற்பிக்க உதவுகிறது. இந்த நாள் மனித கடத்தலின் தீமைகள் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. ஆட்கடத்தல் குறித்து கடந்த […]

July 30, 2024 admin
நீதியின் பெயரில் நடக்கும் வன்முறை! Exclusive

நீதியின் பெயரில் நடக்கும் வன்முறை!

மத்தியப் பிரதேசத்தில் அனுப்பூர் மாவட்டத்தில் பாலுமுடா என்ற பகுதியைச் சார்ந்த சரிகா சென் என்ற 23 வயது இந்துப் பெண், சபிகான் என்ற முஸ்லிம் இளைஞரைக் காதலித்து வந்தார். இருவரும் மதங்கள் கடந்து சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். சிறப்புத் திருமணச் சட்டத்தில் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு முன் அறிவிப்பு கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும். இந்த முன் அறிவிப்பால் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கத் தேடுகின்றனர். […]

July 6, 2024 admin
மணிப்பூரில் அமைதி திரும்பட்டும்!! Exclusive

மணிப்பூரில் அமைதி திரும்பட்டும்!!

இப்போது பற்றியெறியும் மணிப்பூர் அரசியலை உற்றுக் கவனித்தால், தமிழகமும் திராவிட மாடலும் அதனின்று நல்லதொரு பாடத்தை கற்றுக் கொள்ள முடியும். மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். மக்களவைக்கு வெறும் 2 எம்பிக்களை அனுப்பும் சிறிய நிலப்பரப்பு. மாநில சட்டமன்றம் 60 உறுப்பினர்களைக் கொண்டது. மெய்டெய் மக்கள் பெரும்பான்மையாக சமவெளியில் வசிக்கின்றனர். மெய்டெய் மொழியே மணிப்பூரின் மாநில மொழி. மக்கள் தொகையிலும் ஏறத்தாழ அறுபது சதவீதம் இவர்களே. மாநிலத்தின் சட்டமன்றத்தில் அறுபதுக்கு நாற்பது இடங்கள் இவர்கள் வசம். ஆனாலும், […]

May 7, 2023 admin
நான் மிருகமாய் மாற – விமர்சனம்! Exclusive

நான் மிருகமாய் மாற – விமர்சனம்!

ஒரு படத்தில் ,கத்தி, ரத்தம், கொலை என பயங்கர வன்முறை காட்சிகள். அதிகம் இடம் பெறுவதை நாம் பார்த்து இருக்கிறோம்தான், ஆனால் நான் மிருகமாய் மாற படத்தில் வன்முறைக்குள் ஒரு சின்ன கதையை சொல்ல முயன்று இருக்கிறார்கள், அதையும் எந்த ஒரு விறுவிறுப்பும், சுவாரசியமும் இல்லாமல் திரைக்கதை செல்வதால் படத்தைக் காண சகிக்கவில்லை..1 கதை என்னவென்றால் சினி ஃபீல்டில் சவுண்ட் இன்ஜினியர் சசிகுமார். அவரின் தம்பி ஒரு தொழிலதிபரை காப்பாற்றப்போய், அதனால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். கொன்றவர்களை அடையாளம் […]

November 19, 2022 admin
பரோல் -விமர்சனம்! Exclusive

பரோல் -விமர்சனம்!

பெரும்பாலான குடுமபங்களுக்கு பேப்பர் சேதியாக மட்டும் தெரிய வரும் பரோல் பற்றி விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படியான பரோல் பற்றி சொன்னதை விட ரத்தத்தையும், கொலையையும், வன்முறையையும் காட்டி பலான வார்த்தை பிரயோகம் காட்டி இருப்பதுதான் குமட்டுகிறது. அதிலும் இன்னமும் தமிழ் ரசிகர்கள் நினைவில் நிற்கும் விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களின் சாயலில் ஒரு முழு நீளப் படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். அம்மா ஜானகி சுரேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் ஆர்.எஸ்.கார்த்திக். இன்னொருவர் லிங்கா. […]

November 10, 2022 admin
கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு! Uncategorized

கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல தரப்பிலும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் . கிழக்கு ஜாவா மாகாணத்தில் இந்தோனேசியா பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் அரேமா மற்றும் பெர்செபயா கால்பந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் பெர்செபயா அணி அரேமா அணியை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் தோல்வியடைந்த அரேமா அணி ரசிகர்கள் […]

October 2, 2022 admin
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தொடரும் வன்முறை – ஐ.நா. கண்டனம்! . Exclusive

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தொடரும் வன்முறை – ஐ.நா. கண்டனம்! .

இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. மனித உாிமைகள் ஆணையத்தின் தலைவா் மிச்செல் பச்லெட் கண்டனம் தொிவித்துள்ளாா். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.அதிபருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளது. அவற்றை விரைவில் விவாதத்துக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் […]

May 10, 2022 admin
உ.பி. :லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு விசாரணை – சுப்ரீம் கோர்ட் அதிருப்தி! Exclusive

உ.பி. :லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு விசாரணை – சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!

நாட்டை அதிர வைத்த உ.பி. லக்கிம்பூர் கேரி வன்முறைச் சம்பவங்கள் பற்றிய வழக்கு விசாரணை எதிர்பார்த்த வகையில் திருப்தி தரும் அளவில் அமையவில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது அதனால் பஞ்சாப் அரியானா மாநில முன்னாள் நீதிபதி ஒருவர் மேற்பார்வையில் வழக்கு விசாரணையை நடத்த உத்தரவிடலாமா என்று உத்தரப் பிரதேச மாநில அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் திங்களன்று (8-11-2021) கோரியுள்ளது. லக்கிம்பூர் கேரி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டிதில் […]

November 8, 2021 admin