தன்பாலின திருமணச் சட்டம் : மத்திய அரசின் கருத்தை மீறப் போகும் சுப்ரீம் கோர்ட்?

தன்பாலின திருமணச் சட்டம் : மத்திய அரசின் கருத்தை மீறப் போகும் சுப்ரீம் கோர்ட்?

ம் நாட்டில் தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்dடில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பாக பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்பு இணையாக தன்பாலின திருமணங்களை கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காததால் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒரே பாலினத்தவர்கள் திருமண செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என மத்திய அரசு இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் அதை மீறி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கும் என்ற சேதி பரவுகிறது.

2018ஆம் ஆண்டில் தன்பாலின காதல் என்பது குற்றமற்றது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்ளித்தது. இது, LGBTQ+ சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் 7ஆம் தேதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்திய தண்டனை சட்டத்தின் 377ஆவது சட்டப்பிரிவை நீக்கி, இந்தியாவில் தன்பாலின காதல் குற்றமற்றது என உறுதிப்படுத்தியது. இருப்பினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் இப்போதுவரை சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. இது சட்டப்பூர்வமாகாமல் இருப்பதற்கு, மதம் மற்றும் அரசின் குறுக்கீடுகளும், எதிர்ப்புகளும்தான் காரணம் என கூறப்படுகிறது.

இச்சூழலில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தன்பாலின திருமணம் என்பது “இந்திய குடும்ப அமைப்பு” என்ற கருத்துடன் ஒத்துப்போகாது. இந்திய குடும்ப அமைப்பு என்பது “கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது” என்று கூறியது. ஒரு உயிரியல் ஆணை ‘கணவன்’ என்றும், ஒரு உயிரியல் பெண்ணை ‘மனைவி’ என்றும், இருவருக்குமிடையே உள்ள இணைப்பால் பிறக்கும் குழந்தைகள் – உயிரியல் ஆணால் தந்தையாகவும், உயிரியல் பெண்ணை தாயாகவும் வளர்க்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நம் நாட்டைப் பொறுத்தவரை திருமணங்கள் கண்டிப்பாக வேற்று பாலின ஜோடிகளை மட்டுமே அங்கீகரிக்கின்றன. அதாவது, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண். இந்தியாவின் பல மதக் குழுக்களால் வடிவமைக்கப்பட்ட, இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவ திருமணச் சட்டம், இஸ்லாமிய திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்திய திருமணச் சட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை எதுவுமே ஒரே பாலினத்தவர்களுக்கிடையேயான திருமணத்தை அங்கீகரித்தவை அல்ல. LGBTQ+ சமூகத்தினரின் சட்ட உரிமைகள் நீண்ட காலமாக இந்தியாவில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. 2018ஆம் ஆண்டில், தன்பாலின காதலை குற்றம் என கூறிய காலனித்துவ கால கொடூரமான சட்டத்தை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்தது மட்டும்தான் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், LGBTQ+ சமூகத்தினர் இந்தியாவில் தங்களின் சம உரிமைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசியலமைப்பின் கீழ் அவர்களின் உரிமைகளின் விரிவாக்கம் சுப்ரீம் கோர்டால் வழிநடத்தப்பட்டது. இதன் மூலம், உச்ச நீதிமன்றம் இந்தியாவில் தன்பாலின திருமணத்தை விரைவில் சட்டப்பூர்வமாக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. அதாவது, மத்திய அரசின் பரிந்துரையை மீறி சுப்ரீம் கோர்ட் அதை சட்டப்பூர்வமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!