பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதன் சாரம்சம் இதோ :

இயக்குனர் வெற்றிமாறன்:

இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது PVR வெளியிகிறார்கள். நான் வெளியிடுவதை விட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன். இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் .

பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா :

ஹீரோ செங்குட்டுவனுக்கு புது ஹீரோ மாதிரி இல்லாமல் நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் என்கிற மகா கலைஞனை தமிழ் சினிமா சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அதாவது அழுவதற்குக் கூட தமிழ் பண்பாடு உண்டு. இப்படத்தில் அவர் அழும் காட்சியில் உருண்டு புரண்டு நடித்திருக்கிறார். நட்பு காரணமாகவே மணிபாரதி இப்படத்திற்கு பாடலாசிரியராக வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்றார்.

நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி:

பேட்டரி எனக்கு முதல் தமிழ் படம். முழுவதும் சார்ஜில் இருக்கிறது. மேட் இன் சைனா இல்லை. மேட் இன் சென்னை பேட்டரி என்றார்.

வசனகர்த்தா ரவி வர்மன் பச்சையப்பன் :

எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறோம். இப்படம் 2020 மார்ச் மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், கொரோனா காரணமாக இவ்வளவு நாட்கள் தள்ளிப் போய் விட்டது. இப்படத்தில் வரும் சில காட்சிகள் ஒரு படத்தில் வந்திருக்கிறது. ஆனால், அது யதார்த்தமாக நடந்தது தான் என்றார்.

நடிகர் நாகேந்திர பிரசாத் :

எங்கள் அப்பா ( சுந்தரம் டான்ஸ் மாஸ்டரிடம் ) உதவியாளராக இருந்தபோதே தெரியும். இப்படத்தைப் பற்றி கூறும்போது, இது மிகவும் சிறிய படம் என்றார். சிறிய படம், பெரிய படம் என்று சொல்லாதீர்கள். இப்படத்தின் ஒரு வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் நடிக்கிறேன் என்று கூறினேன். இப்படத்தின் கதையை நம்பி எடுத்திருக்கிறார். நிச்சயம் வெற்றியடையும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் :

மணிபாரதிப் பற்றி கூறவேண்டுமானால், நாங்கள் சாலையில் சந்தித்து பேசுவோம், அடிக்கடி போன் செய்து கதை கூறுவார். ஒருநாள் நான் ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களுக்கு சிறந்த கதாபாத்திரம் இருக்கிறது. கண்டிப்பாக அழைக்கிறேன் என்றார். அதன்படி அழைத்தார். நானும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று பணியாற்றியிருக்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் :

மணிபாரதி சாரும், சம்பத் சாரும், பேட்டரி படத்தைப் பற்றி கூறி, வாய்ப்புக் கொடுத்தார்கள். மணிபாரதி சாருடன் பணியாற்றும் போது மிகவும் ஆர்வமாக இருக்கும். இதயப்பூர்வமாக பணியாற்றும் அனுபவம் கிடைக்கும். அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கிறார் என்றார்.

நடிகர் செங்குட்டுவன் :,

எந்த மேடையாக இருந்தாலும், நான் பேசும் முதல் மனிதர் என் அப்பா தான். என்னை இந்தத் துறையில் வெற்றியாளனாக உருவாக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். கொரோனாவிற்கு பிறகு இத்தனை நாள் நாங்கள் இழுத்துப் பிடித்ததற்கு காரணம் திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று தான். இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி என்றார்.

இயக்குனர் மணிபாரதி :

திரைச்சுவை என்னும் பத்திரிகையில் சப் எடிட்டராக பணியாற்றினேன். ரஜினி முதல் அனைவரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஜெயம் ராஜாவின் ரசிகன் நான். சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கி வருகிறார். தெலுங்கில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இப்படமும் இருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். விழாவிற்கு வந்ததற்கு நன்றி. இப்படத்தின் கதையை அம்மு அபிராமியின் அப்பாவிடம் கூறும்போது, அம்மு அபிராமி படத்தின் முழுக் கதையையும் கேட்டார். அம்மு அபிராமி அப்பாவிடம் நேரில் அழைத்து வாருங்கள் என்று கூறினேன். அவருடைய பாத்திரத்தைப் பற்றி 10 நிமிடங்கள் கூறினேன். அதன்பிறகு படத்தின் கதையைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. அவருடைய நடிப்பை சரண் நடிகை சரிதாவுடன் ஒப்பிட்டார். நான் நடிகை ரேவதியுடன் ஒப்பிடுகிறேன். இயக்குனர் மாதையனுக்கு மிக்க நன்றி. அன்பே அன்பே படத்திற்கு நான் கேட்பதையெல்லாம் கொடுத்தார்கள். ஆனால், நான் தான் சரியாக எடுக்கவில்லை. ஆனால், மாதையன் சார் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை செய்துக் கொடுத்தார். படம் முடிக்கும் வரை எந்தவிதத்தலும் தலையிடவில்லை.

நான் செய்த புண்ணியமோ அல்லது என் அப்பா அம்மா செய்து புண்ணியமோ தெரியவில்லை. இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் சூரி மற்றும் பலரும் இங்கு வந்திருக்கிறார்கள். தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். இந்த வருடத்தில் எத்தனை விருதுகள் வெல்ல போகிறார் என்று தெரியவில்லை.

நடிகர் செங்குட்டுவன் முதல் படத்திலேயே கூட்டத்தை சேர்த்து விட்டார். நடிப்புடன் தயாரிப்பு பணிகளையும் பார்த்துக் கொண்டார். இப்படத்திற்காக எதை செய்யலாம் என்று யோசனை கேட்டால், எது சிறந்ததோ அதைத்தான் தேர்வு செய்வார். அதுவே எனக்கு இப்படம் சிறப்பாக இயக்குவதற்கு உறுதுணையாக இருந்தது. எம்.எஸ்.பாஸ்கர் வியந்து பார்க்கக் கூடிய நடிகர் அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஒளிப்பதிவாளர், சதுரங்கவேட்டைக்குப் பிறகு 10 படங்கள் முடித்துவிட்டார். இப்படத்திற்கு பாராட்டு வந்தால், அதற்கு அவரும் முக்கிய காரணம். கலாபவன் மணியை நானும் சரண் சாரும் தான் தமிழுக்குக் கூட்டி வந்தோம். நேரமில்லை என்று கூறியவர் ஜெமினிக்குப் பிறகு தமிழில் அதிக படங்கள் நடித்து, அதிகம் சம்பாதித்தார். இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் கன்னட நடிகர் ராஜ் தீபக் செட்டி இவர் போல வருவார். சித்தார்த் விபின் சிறப்பான இசையமைத்திருக்கிறார். மதன்பாப் சார் எனக்காக ஒரு விளம்பர படம் நடித்துக் கொடுத்தார்.

கலை இயக்குனரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். சினேகன் சாரும் மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்படத்திற்கு சிறுமி கதாபாத்திரத்திற்காக தேடும்போது, கைதி படத்தில் நடித்த மோனிகாவை கேட்டோம். கதை பிடித்தால் தான் நடிப்போம் என்று அவர் அம்மா கூறினார். 1 மணி நேரம் கதை கேட்ட பிறகு ஒப்புக் கொண்டார்கள். படம் பார்த்துவிட்டு 1 மணி நேரம் பேசினார். அந்தளவிற்கு அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. மாரிமுத்து என்னுடைய சிறந்த நண்பர்.

இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் தொடர்பாளர் ஜான்சன் அவர்களுக்கு நன்றி.

விழாவின் இறுதியில், இப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இசைத்தட்டை வெளியிட்டார்கள்.

error: Content is protected !!