ராகுல் காந்தியை ட்யூப் லைட் என்று கலாய்த்த பிரதமர் மோடி!

ராகுல் காந்தியை ட்யூப் லைட் என்று கலாய்த்த பிரதமர் மோடி!

.பார்லிமெண்டில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கு போது ராகுல் காந்தி குறுக்கிட்டுப் பேச முயன்றார். அப்போது நரேந்திர மோதி, “நான் கடந்த 30 நிமிடங்களாகப் பேசுகிறேன். இப்போதுதான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. ட்யூப்லைட் இப்படிதான் வேலை செய்யும்,” என்றார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பங்கேற்றுப் பேசினார்.  அவர் தனது பேச்சினில், ‘பொறுத்திருந்து கவனியுங்கள். தற்போது நிறைய உரைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி, இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. இந்திய இளைஞர்கள் அவரைக் கம்பால் அடிப்பார்கள். இளைஞர்களுக்கு சரியான  வேலை அளிக்கா விட்டால், இந்தியா முன்னேற முடியாது என்பதை மோடிக்கு அவர்கள் புரிய வைப்பார்கள்’ என்று பேசினார்.

இந்நிலையில் நேற்று புதனன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின் போது பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “இந்த 70 வருடங்களில், தன்னிறைவான எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் இல்லை. நான் ஒரு தலைவரின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அதில் அவர் இன்னும் ஆறு மாதங்களில் மோடியை கம்பைக் கொண்டு தாக்குவேன் என்று பேசுகிறார். அது ரொம்ப கடினமான காரியமாக இருப்பதால்தான் ஆறு மாதங்கள் ஆகிறது என்று நினைக்கிறன். இருந்தாலும் இந்த ஆறு மாதங்களில் அதிகமான சூரிய நமஸகாரங்கள் செய்து நான் என்னை அதற்காகத் தயார் படுத்திக் கொள்வேன். கடந்த இருபது வருடங்களாக என் மீது தொடர்ந்து  செய்யப்பட்டு வரும் அவதூறுகளின் காரணமாக, நான் அவதூறு மற்றும் கம்புத் தாக்குதல் ஆகியவற்றால் பாதிக்கப்படாத நிலைக்குச் சென்று விட்டேன். இருந்தாலும் முன்கூட்டியே தகவல் கூறியதற்கு நன்றி!

இவ்வாறு அவர் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்த மோடியின் பேச்சிற்கு ராகுல் காந்தி எழுந்து எதிர்ப்புத் தெரிவிக்க எத்தனித்த சமயம் மோடி, ‘நான் 30 முதல் 40 நிமிடங்களாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால இப்போதுதான் மின்சாரம் பாய்ந்துள்ளது; நிறைய ட்யூப் லைட்டுகள் இப்படித்தான் இருக்கிறது’ என்று மறைமுகமாக ராகுலை ஏளனம் செய்தார்.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் ராகுலிடம் கேட்டதற்கு, ‘நாட்டின் முன் இப்போது எல்லா வற்றுக்கும் மேலாக  இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை வேலையில்லாத திண்டாட்டம். அனால் அதுகுறித்து சொல்வதற்கு மோடிக்கு எதுவும் இல்லை. நமது பிரதமரின் பாணியே திசை திருப்புதல்தான்’ என்று கருத்துத் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!