June 7, 2023

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திடுச்சு – பாகிஸ்தான்!

இண்டர்நேஷனல் சர்ச்சையாகும் என்று எதிர்ப்பார்த்த காஷ்மீர் பிரச்னையில் பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்ததால் மிகவும் அப்செட்டாகி விட்ட பாகிஸ்தான் அடுத்தடுத்து சின்னப் பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக ‘தபால் சேவை’யை இன்று நிறுத்தி விட்டது பாகிஸ்தான் .

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் இருவர் மற்றும் அப்பகுதில் வசித்த ஒருவர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தாஸ் ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். இதை பாகிஸ்தான் ராணுவத்தினர் மறுத்துள்ளனர். இந்நிலையில்,காஷ்மீரில் இந்தியா – பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்துவதாக தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் இந்த முடிவுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “’இதுவரை எந்த ஒரு அறிவிப்பும், நோட்டீஸும் பாகிஸ்தானிடமிருந்து வரவில்லை அப்படியிருக்க தபால் சேவையை நிறுத்துவதாக பாக்., கூறியுள்ளது சர்வதேச தபால் சேவை விதிகளுக்கு எதிரானது’ என தெரிவித்தார்.
.