இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர சம்பளப் புதுப் பட்டியல்!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர சம்பளப் புதுப் பட்டியல்!

ந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது, அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை இருக்கும் என அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கு ஏற்ப அவர்கள் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெறும் இந்திய வீரர்களுக்கு ரூ.7 கோடி ஊதியம் நிர்ணயம். ஏ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊதியம். பி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடி ஊதியம், சி பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ரூ.1கோடி ஊதியம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏ ப்ளஸ் பிரிவில் யார் யார்?

கேப்டன் ரோஹித் சர்மா
முன்னாள் கேப்டன் கோலி
ஜஸ்பிரித் பூம்ரா
ரவீந்திர ஜடேஜா

ஏ பிரிவில் யார் யார்?

ஹர்த்திக் பாண்ட்யா
ரவிச்சந்திரன் அஸ்வின்
முகமது ஷமி
ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட்
அக்சர் படேல்

பி பிரிவில் யார்? யார்?

புஜாரா
கே.எல்.ராகுல்
ஷ்ரேயஸ் ஐயர்
முகமது சிராஜ்
சூர்யகுமார் யாதவ்
சுப்மன் கில்

சி பிரிவில் யார்? யார்?

உமேஷ் யாதவ்
ஷிகர் தவான்
ஷர்துல் தாகூர்
இஷான் கிஷன்
தீபக் ஹூடா
யுஸ்வேந்திர சாஹல்
குல்தீப் யாதவ்
வாஷிங்டன் சுந்தர்
சஞ்சு சாம்சன்
அர்ஷ்தீப் சிங்
கே.எஸ்.பரத்
ஆகிய வீரர்கள் முறையே நான்கு பிரிவுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புவனேஷ்குமார் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் காயத்தில் ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!