பத்திரிகையாளர் போர்வையில் மோசடி பேர்வழிகள் – ஐகோர்ட் எச்சரிக்கை!

பத்திரிகையாளர் போர்வையில் மோசடி பேர்வழிகள் – ஐகோர்ட் எச்சரிக்கை!

பத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கபட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதார மற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் நம்பக தம்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார் இதனையடுத்து மனுதரார் அடையாள அட்டைகளை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.

அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும் காதர் பாஷாக்கும் என்ன தொடர்பு என்றும் காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது என கேள்வி எழுப்பினர்.

மேலும், பத்திரிக்கையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி கொள்வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மஞ்ச பத்திரிக்கை நடத்துபவர்களும் தங்களை பத்திரிக்கையாளர் என கூறி கொள்வது வருத்தத்துகுறியது என தெரிவித்தனர்.

பத்திரிக்கைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் பத்திரிக்கை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது பத்திரிக்கைகளில் செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்வதாகவும், பத்திரிக்கை சங்கங்களை போலி நிருபர்கள் நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுபோன்ற போலி பத்திரிக்கையாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர்..

உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? என காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், தகவல் தொலை தொடர்பு துறை செயலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் மன்றம், சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தை தாமாக இந்த வழக்கில் இணைத்து உத்தரவிட்டனர்..

வழக்கு தொடர்ந்த மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள எப்படி வந்தது என்பது குறித்தும், மனுதாரரின் பத்திரிக்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது குறித்து  அறிக்கை தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

தமிழகத்தில் எத்தனை பத்திரிக்கைகள் உள்ளது அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கிகார அட்டை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்..

error: Content is protected !!