கேல் ரத்னா விருதுகள்:குகேஷ், மனு பாக்கர் உள்பட 4 பேருக்கு அறிவிப்பு!

கேல் ரத்னா விருதுகள்:குகேஷ், மனு பாக்கர் உள்பட 4 பேருக்கு அறிவிப்பு!

விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசின் வழங்கும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தின் குகேஷ் உட்பட 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன் டி குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் பிரவீன் குமார் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்தது.

இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், உரிய ஆய்வுக்கு பின்பும் கீழ் கண்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 17ம் தேதி கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெறுவவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நான்கு பேர் கேல் ரத்னா விருதும், 32 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதும், 3 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும் வழங்கப்பட இருக்கின்றன.

முன்னதாக, கேல் ரத்னா விருது பெறுவோர் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் விடுபட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘மனு பாகர் விண்ணப்பிக்கவில்லை,’ என மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கூறியிருந்தது. அதே சமயம் மனுபாக்கரின் தந்தை ராம் கிஷன், “மனு பாக்கரை துப்பாக்கிசுடுதல் வீராங்கனையாக உருவாக்கியதற்கு பதிலாக கிரிக்கெட் வீராங்கனையாக கொண்டு வந்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக மனு பாக்கரும், “நாட்டுக்காக விளையாடி பெருமை சேர்ப்பது மட்டுமே என் வேலை.விருதுகளும், அங்கீகாரமும் சிறப்பாக செயல்படுவதற்கான துாண்டுகோலே. ஆனால் விருதுகளை பெறுவது மட்டுமே எனது இலக்கில்லை.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!