இந்தியாவில் செல்போன் தயாரிப்பு எகிறுது!

தற்போதைய காலத்தில் மொபைல் சாதனங்களுக்கு அடிமையானவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்று சொன்னால் மிகையல்ல.இவற்றின் உபயோகம் அதிகரிப்பதன் அகாரணமாக ஒவ்வொருவரிடமும் பெரிய மாற்றங்கள் உண்டாகி வருகின்றன. இப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்துதான் வருகின்றது.அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஒரு நாள் முழுவதும் எந்தவிதமான மொபைல் சாதனங்களையும் பயன்படுத்தாது இருந்தால் அந்த ஒரு நாள் ஒரு வருடம் முழுவதும் ஒருவரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள Telefónica அமைப்பு மற்றும் பென்சில்வேனியாவிலுள்ள Carnegie Mellon பல்கலைக்கழகம் இணைந்தே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளன. இதற்காக 30 தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் மொபைல் சாதனங்களை நிறுத்தி வைப்பதனால் தங்களில் குறைந்தளவு மன அழுத்தமே காணப்படுவதாகவும், அதிகளவு ஓய்வு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடைபெறும் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் கையடக்கக் கருவிகளின் உற்பத்தி 350 மில்லியன்களை கடந்து விட்டது என்றும் சென்ற 2016 ஆம் ஆண்டில் 280 மில்லியன்கள் உற்பத்தி இருந்தது என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் 2016 ஆம் ஆண்டில் ரூ. 1,35,000 கோடி மதிப்பிலான வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாராகும் மொத்த கையடக்கக் கருவிகளில் செஃபோன்களின் பங்கு 43 சதவீதம் என்கிறது தனியார் துறையால் எடுக்கப்பட்ட கணிப்பு ஒன்று. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி சில்லறை விற்பனை நிலையங்களின் அதிகரிப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, மின்னணு வர்த்தகத்தின் பரவல் கையடக்கக் கருவிகளின் உற்பத்தி அதிகரிப்பிற்கு காரணம் என்கிறது அறிக்கை.
ஆயினும் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை கையடக்கக் கருவிகளின் வர்த்தகம் ரூ. 12,000 கோடியாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக உற்பத்தி குறைந்து விட்டது. இதை மீண்டும் உயர்த்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் முக்கிய திட்டங்களான மேக்கிங் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்றவை 2015-16 ஆம் ஆண்டில் 85 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இப்போது 2016-17 ஆம் ஆண்டில் ரூ. 90,000 கோடி மதிப்பிற்கு உயர்ந்துள்ளது.
ஏற்றுமதிக்கு அரசு 2 சதவீத ஊக்கத்தொகையே கொடுத்து வருகிறது. இது தவிர இதரச் சலுகைகளை அளித்தால் உற்பத்தி அதிகரிக்கும் என்கின்றனர். குறிப்பாக இறக்குமதி வரியை கையடக்கக் கருவிகளின் உபபொருட்கள் மீது விதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.