கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபீஸ் அசிஸ்டெண்ட் பதவி!

இந்தியாவில் உள்ள கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிகளில் 9628 இடங்களுக்கு ஜூலை 1 – 21 வரை ஐ.பி.பி.எஸ்., ஏற்கனவே விண்ணப்பங்களை வரவேற்றது. தற்போது 9.11.2020க்குள் கல்வி தகுதியை முடித்தவர்கள், ஜூலை 1 – 21 வரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்:
நாட்டில் 43 கிராம வங்கிகளில் 9628 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு கிராம வங்கியில் ஆபிஸ் அசிஸ்டென்ட் 260, அதிகாரி 76 காலியிடங்கள் உள்ளன.
வயது:
ஆபிசர் ஸ்கேல் I (சீனியர் மேனேஜர்) பதவிக்கு 21- 40, ஆபிசர் ஸ்கேல் II (மேனேஜர்) பதவிக்கு 21- 32, ஆபிசர் ஸ்கேல் III (அசிஸ்டென்ட்) பதவிக்கு 18-30, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு 18-28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி:
ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, அதிகாரி பணியிடங்களுக்கு பைனான்ஸ், மார்க்கெட்டிங், விவசாயம், கால்நடை அறிவியல், ஐ.டி., கம்ப்யூட்டர், சட்டம், பொருளியல், அக்கவுன்டன்சி போன்றவற்றில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
பிரிலிமினரி, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலுார், விருதுநகர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்:
ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசிநாள்:
9.11.2020
விபரங்களுக்கு: