+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

நாடு முழுக்க கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என்ற பெயரில் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆந்திரா மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொரோனா தாக்கம் காரணமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சிபிஎஸ்இ +2 மதிப்பெண்ணானது மாணவர்கள் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் விகிதத்தைக்கொண்டே வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து இன்று விசாரணை நடைபெற்றது. இதுகுறித்து நீதிபதி அமர்வு, மாநிலங்கள் மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் எனவும், அதன்பிறகு தேர்வு முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

முன்னதாக, ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ +2 தேர்வு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்த பிறகே, மாநில அளவிலான +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிட முடியும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!