விரைவில் நம் வீட்டு விலாசம் 6 இலக்க எண்ணாக மாற போகிறது!

விரைவில் நம் வீட்டு விலாசம்  6 இலக்க எண்ணாக மாற போகிறது!

தேசம் முழுவதும் பொது மக்களுக்கு ஆதார் எண் வழங்கியது போல அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் டேக் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மிடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதன்படி பொதுமக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் பணிபுரியும் அலுவலகங்களுக்கு விலாசம் அகற்றப்பட்டு டிஜிட்டல் டேக் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவில்இ தகவல் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தபால் துறையின் மூலம் நாட்டில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகம் மற்றும் நிலங்களுக்கு 3 இலக்க பின் கோடை அடிப்படையாக கொண்டு 6 இலக்க ஆங்கில எழுத்துக்கள் உடன் எண்கள் (ஆல்ஃபா நியூமரிக்) என்ற டிஜிட்டல் டேக் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கூகுள் மேப் வழங்குவதைப் போல தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு அலுவலகங்கள் நிலம் ஆகியவற்றிற்குத் தனித் தனியாக ஈ-லொக்கேஸன் என்ப்படும் மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இப்படி நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் மின்னணு முறையில் மாற்றுவதன் மூலம் சொத்தின் விபரம்இ அதன் உரிமையாளர் சொத்து வரி அறிக்கைகள் மின்சாரம் தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள் என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும். மேலும் இந்த 6 இலக்க ஆல்ஃபா நியூமரிக் எண்களை விலாசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்கு இது உருமாறும்.

இனி ஒருவரின் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லவேண்டும் என்றால் மேப்மைஇந்தியா (அயிஅலiனெயை) தளத்தில் 6 இலக்க எண்ணை பதிவிட்டால் போதும் செல்லும் வழியைக் காட்டிவிடும்.

❂ மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைச் சரியான முறையில் நேரடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க மிகப்பெரிய அளவில் உதவி செய்வது மட்டுமல்லாமல் அரசு சொத்துக்களைக் கையகப்படுத்துவதைக் குறைக்க முடியும்.

நம் இந்தியா போன்ற நெருக்கமான நாடுகளில் வீடு மற்றும் அலுவலகங்களை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. அதனை எளிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான். தற்போது இத்திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முதற்கட்டமாக டெல்லி மற்றும் நொய்டாவில் 2 பகுதிகள் அதாவது 2 பின்கோடுகளுக்கு மட்டுமே டிஜிட்டல் டேக் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மாதிரி மற்றும் முழு விபரங்களை மேப்மை இந்தியா மத்திய தபால் துறையிடம் விளக்கம் அளித்த பின்புஇ அதனை முழுமையாக ஆய்வு செய்த பின்பே இத்திட்டத்திற்குத் தபால் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படியே தற்போது முதற்கட்ட சோதனை முயற்சிகள் டெல்லி மற்றும் நொய்டா பகுதியில் மேற்கொண்டு வரப்படுகிறது.

இந்தச் சோதனை திட்டம் வெற்றியடைந்தால் மேப்மைஇந்தியா திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!