உலகில் முதல் முறையாக சென்னையில் சிலிக்கான் சிலைகளின் “லைவ் ஆர்ட் மியூசியம்”!.

உலகில் முதல் முறையாக சென்னையில் சிலிக்கான் சிலைகளின்  “லைவ் ஆர்ட் மியூசியம்”!.

கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகிஉள்ளது “லைவ் ஆர்ட் மியூசியம்”. உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும்துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் அச்சிலைக்கு உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால்திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில்அமைந்து  சென்னைக்கு பெருமையான ஒன்று.

vgp apr 30

யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான ஓவியங்களை .பி.ஸ்ரீதர்,சிலை வடிவமைப்பை ரவி,   ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு  திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்பை ஆர்ட்டைரக்டர் அப்பு அற்புதமாக அமைத்திருக்கிறார். கிரேட்டிவ் டிசைன்ஸ் சை சுதிர் மற்றும் ராகுல் மேற்கொண்டனர்.

அது பற்றி கேட்ட போது , “ அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோணி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா,மைக்கல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களை வடிவமைக்க முடிவெடுத்த பின் அதற்கென நிறைய நுணுக்கமானவிஷயங்களை சேகரித்து, விவாதித்து ஆராய்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தோம். அந்த சிலைகளின் அருகேசெல்லும்போது நீங்கள் நெகிழப்போவது உறுதி” என்றார் ஸ்ரீதர்.

இன்று 30ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மதியம் 1.30 மணியளவில் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, நடிகைகீர்த்தி சுரேஷ் அவர்கள் திறந்து வைக்க இருப்பது இன்னும் சிறப்பு.

error: Content is protected !!