உலக தடகள சாம்பியன்ஷிப் ; ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பியன்ஷிப் ; ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

லக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த பாகிஸ்தான் வீரர் ஷர்ஷத் நசீம் வெள்ளி வென்றுள்ளார். முன்னதாக, 2016- தெற்கு ஆசியா, 2017 – ஆசிய சாம்பியன்ஷிப், 2018 – காமன்வெல்த். 2018- ஆசியா, 2020 – ஒலிம்பிக், 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2022 – டைமண்ட் லீக், 2023 – உலக சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் குறிப்பிடத்தக்கது.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளன்று இந்தியா சார்பில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, டிபி மானு மற்றும் கிஷோர் ஜேனா பங்கேற்றனர்.முதல் சுற்றில் 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அவர் தனது முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார்.

இரண்டாவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து, பட்டியலில் முதலிடம் பிடித்தார். மூன்றாவது வாய்ப்பில் 86.32 மீட்டர் தூரமும், நான்காவது வாய்ப்பில் 84.64 மீட்டர் தூரமும், ஐந்தாவது வாய்ப்பில் 87.73 மீட்டர் தூரமும், கடைசி வாய்ப்பில் 83.98 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அர்ஷத் நதீம் தனது மூன்றாவது வாய்ப்பில் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து நான்காவது வாய்ப்பில் 87.15 மீட்டர் தூரமும் வீசிய அவர், ஐந்தாவது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். கடைசி வாய்ப்பில் 81.36 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இந்திய வீரர்கள் டிபி மானு (6-வது இடம்) மற்றும் கிஷோர் ஜேனா (5-வது இடம்) பிடித்து டாப் 6 வீரர்களில் இடம் பெற்றனர். அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கமும், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வெள்ளியும், செக் குடியரசை சேர்ந்த யக்கூப் வெண்கலம் வென்றார். தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா தனது வெற்றி குறித்து பேசுகையில், நான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் என் மீது அழுத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால், இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இது போன்ற பெரிய போட்டிகளில் (உலக சாம்பியன்ஷிப்) சிறப்பாக செயல்படும் பொறுப்பு எனக்கு அதிகம் உள்ளது.

ஒவ்வொரு முறையும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எனது வழக்கமான பயிற்சியுடன், நான் அடிக்கடி காட்சிப்படுத்தலில் ஈடுபடுகிறேன், இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என பேட்டியளித்தார்.

error: Content is protected !!