UPSC-ல் அமலாக்க/அக்கவுண்ட்ஸ் அதிகாரி பணியிட வாய்ப்பு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) அமலாக்க அதிகாரி (Enforcement Officer – EO) மற்றும் கணக்கு அதிகாரி (Accounts Officer – AO) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 156 நிரந்தரப் பணியிடங்கள் உள்ளன.

முக்கிய தகவல்கள்:
- விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
- விண்ணப்பிக்கும் கடைசித் தேதி: ஆகஸ்ட் 18, 2025
- பணியிடங்கள்: 156 (அமலாக்க அதிகாரி / கணக்கு அதிகாரி)
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தப் பிரிவிலும் இளங்கலை பட்டம்.
- வயது வரம்பு: அதிகபட்சம் 30 ஆண்டுகள் (அக்டோபர் 18, 2025 நிலவரப்படி). அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
- சம்பளம்: 7வது மத்திய ஊதியக் கமிஷன் (7th CPC) படி ஊதிய நிலை – 8 (Level-08).
தேர்வு செயல்முறை:
தேர்வு இரண்டு முக்கிய நிலைகளில் நடைபெறும்:
- ஆட்சேர்ப்புத் தேர்வு (Recruitment Test – RT): இது புறநிலை வகைத் தேர்வாகும் (Objective Type Written Exam).
- நேர்காணல் (Interview/Personality Test):
மேலும் விவரங்களுக்கு:
கூடுதல் தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரிவாகத் தெரிந்துகொள்ள ஆந்தை ரிப்போர்ட்டர் வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்க்-கை க்ளிக் செய்து பார்க்கலாம்.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் எதிர்காலத்தை வளமாக்க வாழ்த்துகள்


