இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் : அமெரிக்க பெண் கைது- வீடியோ1
அமெரிக்கா டெக்சாஸ் பகுதியில் அமெரிக்க பெண் நடத்திய இனவெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 இந்திய பெண்கள் மீது கொடூரமாக தாக்கியதாகவும் சொல்லப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பெண்கள் ஓட்டலில் இரவு சாப்பிட்டுவிட்டு அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்கள் காரை எடுக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர், இவர்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த அமெரிக்க பெண்மணி, இந்திய பெண்களை நோக்கி, “நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்க்கையை விரும்பி அமெரிக்காவிற்கு வருகிறார்கள். நான் எங்கு சென்றாலும், நீங்கள் இந்தியர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள். இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தால், நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்? இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று ஆவேசமாகப் பேசினார்.
அதன்பின் அவர்களை சரமாரியாக தாக்க தொடங்கினார். இந்த சம்பவம் கடந்த (புதன்கிழமை) இரவு இந்த நடந்துள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “இந்த சம்பவம் டெக்சாஸில் டல்லாஸ் பகுதியில் என் அம்மாவும் அவரது மூன்று நண்பர்களும் இரவு உணவிற்குச் சென்ற பிறகு நடந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பெண்களை அமெரிக்க பெண்மணி தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ, அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே வைரலாக பரவியது. அதே நேரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர்: எஸ்மெரெல்டா உப்டான். இவர் பிளானோ மாகாணத்தைச் சேர்ந்தவர். 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கையில் ஒரு துப்பாக்கி வைத்திருந்த அந்தப் பெண், இந்தியப் பெண்களை சுடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.