32°C

Tag: <span>ஜனநாயகம்</span>

அரசாங்கம் என்பது ஒரு ‘பிக்பாஸ்’ வீடா?-வேவு பார்க்கப்படும் இந்தியக் குடிமகன்! Exclusive

அரசாங்கம் என்பது ஒரு ‘பிக்பாஸ்’ வீடா?-வேவு பார்க்கப்படும் இந்தியக் குடிமகன்!

ஜனநாயகம் என்றாலே “கண்ணாடி அறை” நிர்வாகம்தான். அதாவது, மக்கள் வரிப்பணத்தில் அரசு என்ன செய்கிறது, என்னென்ன கோப்புகளை நகர்த்துகிறது என்பதை ஒரு சாதாரண குடிமகனும் பார்க்க முடியும் என்பதே அதன் அடிப்படை. ஆனால், 2026-ல் இந்தியா நிற்கும் இடம் வேறு. இங்கே கண்ணாடி அறையில் மக்கள் இருக்கிறார்கள்; இருட்டு அறையில் அமர்ந்து கொண்டு அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகம் என்ற பெயரில் ஒரு ‘டிஜிட்டல்’ வேவு! முன்பெல்லாம் ஒருவரை உளவு பார்க்க வேண்டுமென்றால், அவரது வீட்டிற்குப் பின்னால் […]

January 17, 2026 admin
எல்லை தாண்டிய இதழியல் முடக்கம்: அரசுகளுக்கு ‘கில்ட்’ கொடுத்த டோஸ்! Exclusive

எல்லை தாண்டிய இதழியல் முடக்கம்: அரசுகளுக்கு ‘கில்ட்’ கொடுத்த டோஸ்!

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இரு நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் புரிதலை ஏற்படுத்தும் பாலமாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் அரசியல் பதற்றங்கள், இப்போது ஊடகத் துறையையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளும் பரஸ்பரம் ஊடகங்களைத் தடை செய்து வருவது, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? […]

January 15, 2026 admin
அறமற்றுப் போன ஜவான்கள்: தமிழகக் காவல்துறையின் ‘மனநோய்’ எச்சரிக்கை! Exclusive

அறமற்றுப் போன ஜவான்கள்: தமிழகக் காவல்துறையின் ‘மனநோய்’ எச்சரிக்கை!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பொறுப்பேற்ற போது, “மக்களுக்கான ஆட்சி” என்ற முழக்கம் ஓங்கி ஒலித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தின் வீதிகளில் ஒலிக்கும் போராட்டக் குரல்களும், அவற்றைக் கையாளும் காவல்துறையின் முறைகளும் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததாகத் தெரியவில்லை. கோரிக்கைகளுடன் வருவோரைப் பேச்சுவார்த்தை மூலம் அரவணைக்க வேண்டிய அமைச்சரவை தவறும் போது, அந்தப் பெரும் சுமை காவல்துறையின் தோள்களில் ஏற்றப்படுகிறது. விளைவு, தமிழகக் காவல்துறை இன்று ஒரு மனிதாபிமானமற்ற எந்திரமாக மாறி வருகிறதோ […]

December 27, 2025 admin
ஜனநாயகத்தின் 4-வது தூண்: பட்ஜெட்டில் ஊடக எதிர்பார்ப்பு இவ்வளவுதான்! Exclusive

ஜனநாயகத்தின் 4-வது தூண்: பட்ஜெட்டில் ஊடக எதிர்பார்ப்பு இவ்வளவுதான்!

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் ஊடகத்துறை, இன்று கண்ணுக்குத் தெரியாத பல முனைகளில் இருந்து அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் வருமான நெருக்கடி, மறுபுறம் தொழில்நுட்பச் செலவுகள், இன்னொரு புறம் சட்டச் சிக்கல்கள் எனச் சிறு மற்றும் சுயாதீன ஊடகங்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இதை கவனத்தில் கொண்டு நடப்பு 2026–27 மத்திய பட்ஜெட்டில் என்பது வெறும் நிதி ஒதுக்கீடாக மட்டும் இல்லாமல், இந்திய ஜனநாயகத்தின் குரலைப் பாதுகாக்கும் ஒரு ‘காப்புக் கேடயமாக’ சில […]

December 21, 2025 admin
பெண்களுக்கு எதிரான ஏஐ போர்: அதிரவைத்த ஐநா-வின் பகீர் அறிக்கை! Exclusive

பெண்களுக்கு எதிரான ஏஐ போர்: அதிரவைத்த ஐநா-வின் பகீர் அறிக்கை!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உலகை மாற்றப்போகும் ஒரு சக்தியாகக் கருதப்பட்டாலும், அது இன்று பொதுவெளியில் இயங்கும் பெண்களுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஏஐ-ஆல் தூண்டப்படும் இணைய வன்முறை என்பது இனி வருங்கால அபாயம் அல்ல; அது ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கசப்பான உண்மை. ஐக்கிய நாடுகள் சபையின் (UN Women) புதிய ஆய்வறிக்கையின்படி, ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் பெண்களின் குரலை ஒடுக்கவும், அவர்களைச் சிறுமைப்படுத்தவும் ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) மிக மோசமான […]

December 19, 2025 admin
நேருஜி மீது ‘வாக்குத் திருட்டுப்’ பழி?- வரலாற்றைத் திரிக்கும் பாஜகவின் அற்ப அரசியல்! Exclusive

நேருஜி மீது ‘வாக்குத் திருட்டுப்’ பழி?- வரலாற்றைத் திரிக்கும் பாஜகவின் அற்ப அரசியல்!

சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவை, “இந்தியாவின் முதல் வாக்குத் திருடர்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது, வெறும் அரசியல் விமர்சனமோ அல்லது கவனக்குறைவான பேச்சோ அல்ல. இது, இந்தியாவின் ஜனநாயக வரலாற்றையும், சுதந்திரத்திற்குப் பிந்தைய கட்டமைப்பையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி. பொறுப்பற்ற வகையில் வரலாற்றைத் திரித்து, மாற்றுக்கருத்து கொண்ட தலைவர்களின் தியாகத்தை இருட்டடிப்பு செய்வதையே தேசிய சாதனையாகக் கருதும் பா.ஜ.க.வின் அரசியல் போக்கைக் அனைவரும் […]

December 11, 2025 admin
சங்கிலி உடைந்ததா? பேனா விற்கப்பட்டதா? – இந்திய ஊடகங்களின் புதிய அடிமைத்தனம்! Exclusive

சங்கிலி உடைந்ததா? பேனா விற்கப்பட்டதா? – இந்திய ஊடகங்களின் புதிய அடிமைத்தனம்!

சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினமாமின்று. மனித மாண்புக்கும் சுதந்திரத்துக்கும் எதிரான கொடூரமான அடிமை முறையை நாம் ஒழித்ததன் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து விலங்கு பூட்டிய கைகள் நீக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், இந்த நவீன உலகில் சங்கிலியின் சத்தம் கேட்காமல், மனசாட்சி விற்கப்படும் அடிமைத்தனம் உருமாறி நீடித்துக் கொண்டிருக்கிறது. வரலாற்றில் அடிமைகள் என்பவர்கள், தனிச்சொத்துக்களைப் பெருக்கவும், உற்பத்தி முறையை நிலைநிறுத்தவும் ஆதிக்க சக்திகளால் “பேசும் கருவிகளாக” நடத்தப்பட்டனர். ஆனால் இன்று, தகவல் மற்றும் சிந்தனை […]

December 2, 2025 admin
இந்தியாவின் மகா சாசனம்: அரசியல் சாசன தினம் – ஒரு சிறப்புக் பார்வை Exclusive

இந்தியாவின் மகா சாசனம்: அரசியல் சாசன தினம் – ஒரு சிறப்புக் பார்வை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்வது அதன் அரசியலமைப்புச் சட்டம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி, ‘தேசிய அரசியல் சாசன தினம்’ (Constitution Day) அல்லது ‘சம்விதான் திவாஸ்’ (Samvidhan Divas) எனக் கொண்டாடப்படுகிறது. 1949ஆம் ஆண்டு இதே நாளில் தான் இந்திய அரசியல் நிர்ணய சபையால் நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் பின்னணி மற்றும் சிறப்பம்சங்களை  காண்போமா? உருவான வரலாறு மற்றும் கால அளவு இந்தியா சுதந்திரம் […]

November 26, 2025 admin
வாக்குத் திருடர்களை பாதுகாக்கும் தேர்தல் ஆணையம் – ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு Exclusive

வாக்குத் திருடர்களை பாதுகாக்கும் தேர்தல் ஆணையம் – ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு

செப்டம்பர் 18, 2025 இன்று, இந்திய அரசியலில் ஒரு புயலைக் கிளப்பிய பகீர் குற்றச்சாட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வாக்காளர் பட்டியலைத் திட்டமிட்டுத் திருடுவதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்றும், மாறாக, இந்தச் செயலுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையின் மீதும், நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீதும் விழுந்த ஒரு நேரடி அடியாகப் பார்க்கப்படுகிறது. […]

September 18, 2025 admin
உலக மக்களாட்சி தினம்: வலிமையும் சவால்களும்! Exclusive

உலக மக்களாட்சி தினம்: வலிமையும் சவால்களும்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ஆம் நாளை மக்களாட்சி தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2007-இல் அறிவித்தது.மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி. இதில் சொல்லப்படும் ‘மக்கள்’ என்பது நாம் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அதுவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரஜைகள் நாம். மேலும் ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றியது.  உலகில் ஜனநாயகம் முதன்முதலாக துளிர் விட ஆரம்பித்தது கி. மு 600 ம் ஆண்டில் இந்தியாவிலும், மொசபெடாமியாவிலும் […]

September 15, 2025 admin