சி.பி.ஐ. சீஃப் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் : கொஞ்சம் அறிமுகம்!

சி.பி.ஐ. சீஃப் சுபோத் குமார்  ஜெய்ஸ்வால் : கொஞ்சம் அறிமுகம்!

கடந்த மூன்று மாதங்களாக காலியாக இருந்த சி.பி.ஐ. புதிய இயக்குனர் பொறுப்பில் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய குழு மூன்று பெயர்களை இறுதிப் பரிசீலனைக்கு தெரிவு செய்து. இதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் இவர் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் நகரில் கடந்த 1962-ம் ஆண்டு செப்டம் 22ம் தேதி பிறந்தவர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால், சிஎம்ஆர்ஐ பிரிவின் டி நோபிளி பள்ளியில் படித்தார். இளங்கலை பட்டமும், எம்.பி.ஏவும் முடித்த சுபோத்குமார் கடந்த 1985-ம் ஆண்டு மகாராஷ்டிரா கேடர் ஐபிஎஸ்அதிகாரியாக தேர்வானார். 2018ம் ஆண்டில் மும்பை நகரின் போலீஸ் ஆணையராகவும் சுபோத் குமார் பணியாற்றியுள்ளார். மும்பை போலீஸ் ஆணையராக நியமிக்கப்படும் முன்,மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.

தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக ஜெய்ஸ்வால் இருந்தபோதுதான், மும்பையை உலுக்கிய ரூ.20ஆயிரம் கோடி போலி பத்திர தெல்ஜி ஊழல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த தெல்ஜி போலி முத்திரைத்தாள் ஊழலில் ஏராளமான அதிகாரிகள் சிக்கினர்.

அதன்பின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் டிஐஜியாக சுபோத்கமார் இருந்தபோதுதான், 2006ம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்தார். அதே ஆண்டில் மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அவர்களை ஒடுக்க சிறப்பு அதிகாரியாக சுபோத்குமார் நியமிக்கப்பட்டார். சுபோத்குமாரின் சிறப்பான சேவையைப் பாராட்டி 2009ம் ஆண்டு குடியுரசுத் தலைவர் போலீஸ் விருது வழங்கப்பட்டது.

அதன்பின் மகாராஷ்டிரா காவல் டிஜிபியாக சுபோத்குமார் நியமிக்கப்பட்டார், 2022ம் ஆண்டுவரை சுபோத்குமார் டிஜிபியாக பதவிக்காலம் இருந்தநிலையில் மத்தியப்பணிக்கு மாற்றப்பட்டு மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் தலைவராக நியமிக்கப்பட்டார். சுபோத்குமார் மும்பை போலீஸ் ஆணையராக நியமிக்கப்படும் முன், மத்தியஅரசின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவான “ரா” பிரிவில் ஏறக்குறைய 9 ஆண்டுகள் ஜெய்ஸ்வால் பணியாற்றியுள்ளார்,அதில் 3 ஆண்டுகள் கூடுதல் செயலராக இருந்துள்ளாராக்கும்.

error: Content is protected !!