வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்புகள்!

வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்புகள்!

பொதுத்துறை வங்கிகளுக்கான பணியிடங்களை, ‘இன்ஸ்டியூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன்’ (ஐ.பி.பி.எஸ்.,) அமைப்பு நிரப்பி வருகிறது. அலகாபாத், ஆந்திரா, இந்தியன் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் 1,163 சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி., ஆபிசர், அக்ரிகல்ச்சர் பீல்டு ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர்., மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரிகள் என ஆறு பதவிகளுக்கு பணியிடங்கள் உள்ளன.

வயது: 20-30. இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி: ஐ.டி., ஆபிசர் பணிக்கு கம்யூட்டர் சயின்சில் நான்கு ஆண்டு இன்ஜினியரிங் அல்லது ஐ.டி., என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அக்ரிகல்ச்சர் பீல்டு ஆபிசர் பதவிக்கு அக்ரிகல்ச்சர், கால்நடைத்துறை உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் நான்கு ஆண்டு படிப்பு முடித்திருப்பது அவசியம். சட்ட அதிகாரி பணிக்கு, சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எச்.ஆர்., பதவிக்கு, எச்.ஆர்., துறையில் முதுகலை, மார்க்கெட்டிங் ஆபிசர் பதவிக்கு எம்.பி.ஏ., (மார்க்கெட்டிங்) முடித்திருப்பது அவசியம். ராஜ்பாஷா அதிகாரி பணிக்கு ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு: பிரிலிமெனரி, மெயின், நேர்காணல் என மூன்று கட்டமாக நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:
 ரூ. 600. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசி தேதி: 26.11.2019

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!