நோகாமல் நுங்கு சாப்பிட வழிகண்ட கமல்!

நோகாமல் நுங்கு சாப்பிட வழிகண்ட கமல்!

மலஹாசன் ஒரு மாடர்ன் சங்கி, அவரது கலைத்துறைப் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது, ஆனால், கொஞ்சம் ஆழமாக அவரது திரைப்படங்களை நாம் கவனித்தாலும், சங்கி அடையாளங்கள் முழுமையாக இருக்கும். “விஸ்வரூபம்” எல்லாம் இஸ்லாமிய வெறுப்புணர்வை மிக மென்மையாகக் கடத்தும் படம்தான். இப்போது “Thug Life” என்றொரு படத்தை விளம்பரம் செய்கிறார்கள், அதற்கு “யுகே, யுகே” என்றொரு தலைப்பை அவர் பரிந்துரை செய்தாராம். தமிழகத்தில் வணிகம் செய்வது, தமிழ் மக்களிடம் இருந்து சகல செல்வாக்கையும் பெற்றுக் கொள்வது, ஆனால், சமஸ்க்ருதத்தில் பெயர் சூட்டப் பார்ப்பது, இதெல்லாம் மாடர்ன் சங்கிகள் செய்வதுதான்.

சரி, அது விஷயமில்லை, கமலஹாசன் வழக்கம் போல சுத்த சங்கியாகத்தான் அரசியலுக்குள் வந்தார், கலைஞர் இருக்கும் போதே, மையத்தின் விளம்பரத்தில் ஸ்டாலின் மீது டார்ச் லைட்டை விசிறி அடித்து ஒரு டீவியை வேறு உடைத்து வைத்தார்.திமுக ஊழல் கட்சி என்றும், திராவிடம் மக்களுக்கு எதிரானது என்றும் ஏறத்தாழ ஒரு ஆர்.எஸ்.எஸ் கைக்கூலியைப் போலத்தான் அந்தத் தேர்தலில் பேசிப் பரப்புரை செய்தார்.தமிழக மக்கள் பெரிதாக அவரைக் கண்டு கொள்ளவில்லை, கோவையில் தோற்கடித்தார்கள், மெல்ல வழக்கமாக சங்கிகள் செய்யும் வேலையை ஆரம்பித்தார், திமுகவோடு நெருங்கி, வால் பிடித்தார், கூட்டணி வைத்தார், பிறகு நோகாமல் நுங்கு சாப்பிட ஒரு மாநிலங்களவை சீட்டையும் வாங்கிக் கொண்டார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது வெறும் நியமனப் பதவி அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத்தான் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிறார்கள்.ஆகவே அவர்களும் மக்கள் பிரதிநிதிகள். அடிப்படையில் சங்கிகளாக இருந்து, பதவி மற்றும் அதிகார வேட்கைக்காக திமுகவைப் போன்ற கட்சியின் ஆதரவில் கமலஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதில் எனெக்கெல்லாம் எந்த வகையிலும் உடன்பாடு இல்லை. போகிற போக்கில் எஸ்.வி.சேகரின் தந்தையார் பெயரில் தலைநகரின் சாலைக்குப் பெயர் வைப்பது மாதிரித்தான் இந்த மக்களைவை உறுப்பினர் கொடை, மன்னராட்சியில் தான் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக எதையாவது செய்வார்கள்.

இது மக்களாட்சி. கட்சிக்காக, மக்களுக்காகப் பல்வேறு பணிகளில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களுக்காக, அவர்களின் நினைவாக நீங்கள் பெயர் சூட்டினால் சரி.மற்றபடி, நடக்கட்டும், கமலஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராகி என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்? ஏற்கனவே போட்ட ஒப்பந்தம் தான், ஆனாலும் இப்போது சொல்ல வேண்டும் என்று தோன்றியது…!

கை.அறிவழகன்

Related Posts