மகாராஷ்ட்ரா பேங்க் -கில் சப் ஸ்டாப் (பார்ட் டைம்) ஜாப் ரெடி!

மகாராஷ்ட்ரா பேங்க் -கில் சப் ஸ்டாப்  (பார்ட் டைம்) ஜாப் ரெடி!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று மகாராஷ்டிரா வங்கி. புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கி 29 மாநிலங்களில் 1895 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கி கிளைகளில் சப் ஸ்டாப் (பகுதி நேரம்) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 450 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழகத்திற்கு 10 பணியிடங்கள் உள்ளன, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 221 பணியிடங்கள் உள்ளன.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பகுதிநேர பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, விதிவிலக்கு, தேர்வு செய்யும் முறை, எழுத்துத் தேர்வு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 5-6-2017-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bankofmaharastra.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

error: Content is protected !!