நாட்டின் முதல் தனியார் ரயில்: தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது!

நாட்டின் முதல் தனியார் ரயில்: தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது!

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ், லக்னோ – புதுடில்லி இடையே இயக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரயிலில் பயணம் செய்பவர் புதியதொரு அனுபவத்தை பெறுவர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், தேஜஸ் எக்ஸ்பிரஸினை, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். முதல் நாளில் இந்த ரயிலில் 389 பயணிகள் பயணித்தனர். அக்டாபர் 4 காலை 6.10 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், நண்பகல் 12.25 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தது. மறுமார்க்கத்தில், டெல்லியில் மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு லக்னோவை வந்து அடைந்தது.

இன்று அக்டோபர் 5-ஆம் நாள் முதல் வழக்கமாக டெல்லியில் இருந்து இயக்கப்பட்டது . லக்னோ வில் இருந்து இன்ரு முதல் இயக்கப்படுகிறது. செவ்வாய் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும். கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும். லக்னோ வில் இருந்து டெல்லிக்கு 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் விமானத்தைப் போல ரயில் பெட்டி யில் ஏறும் போது, பயணிகளை வரவேற்க பணிப் பெண்கள், டிராலியில் உணவு கொண்டு வந்து கொடுப்பது, பயணிகளுக்கு தேவையான உணவு, குளிர் பானங்கள் என தேஜாஸ் ரயிலில் பயணிக்கும் பயணிக்கு நிச்சயம் விமானத்தில் பயணித்த அனுபவம் கிடைக்கும் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். முன்னதாக, இந்த ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்தது.

அதன் படி, இந்த ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலானால், ரூ.100 இழப்பீடாக அளிக்கப் படும். ரயில் வருவதற்கு 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமானால், பயணிகளுக்கு ரூ.250 இழப்பீடு அளிக்கப்படும்.

அத்துடன், தேஜஸ் ரயிலில் பயணிப்பவா்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவசக் காப்பீடு அளிக்கப்படும். மேலும், பயணிகளின் இல்லத்துக்கும் சோத்து காப்பீட்டுப் பலன் கிடைக்கும். அதாவது, பயண நேரத்தில் பயணிகளின் இல்லத்தில் கொள்ளை சம்பவங்கள் நோந்தால் அதற்கும் இழப்பீடு வழங்கப்படும். இதுவும் முதல் முறையாகும்.

டெல்லி-லக்னெள இடையே வாரத்தில் 6 நாள்களுக்கு தேஜஸ் ரயில் இயக்கப்படவுள்ளது. லக்னோ-டெல்லி பயணக் கட்டணம் ரூ.1,125 (ஏசி வகுப்பு), ரூ.2,310 (எக்சிகியூட்டிவ் வகுப்பு) நிா்ணயிக்கப்  பட்டுள்ளது. டெல்லியிலிருந்து லக்னெளவுக்கு செல்ல ரூ.1,280, ரூ.2,450 பயணக் கட்டணமாக நிா்ணயிக்கப் பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவைப்பட்டால் இலவசமாக குடிநீரும், தேநீரும் வழங்கப்படும்.

விமானங்களில் வழங்கப்படுவது போல் டிராலியில் உணவு கொண்டுவந்து தரப்படும்.

பல்வேறு நாடுகளில் ரயில்கள் உரிய நேரத்தில் வராமல் இருந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதை அலுவல கங்களிலும், கல்லூரிகளிலும் அவா்கள் காண்பிக்க பயன்படுத்திக் கொள்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!