அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ சோதனை!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ  சோதனை!

மெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக டிரம்ப் சொன்னது இதோ:

புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெற்கு புளோரிடாவில் உள்ள தனது கடற்கரை பங்களாவில் சோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த சோதனை அவசியமற்றது. முறையற்றதும் கூட. 2024ம் ஆண்டு நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை முழுமையாக விரும்பாத தீவிர டெமாக்ரேட் கட்சியினரின் தாக்குதல் இது. நீதி அமைப்பை ஆயுதமாக்கி உபயோகிக்கின்றனர் எனவும் இது குறித்து குற்றம்சாட்டி உள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து புளோரிடாவில் உள்ள தனது ஆடம்பர இல்லத்திற்கு சில ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை தன்னுடன் டிரம்ப் கொண்டு சென்றவற்றை பற்றி இந்த சோதனை நடைபெற்றிருக்க கூடும் என கூறப்படுகிறது. டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதா என்பது குறித்து எப்.பி.ஐ தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை.

error: Content is protected !!