எவரெஸ்ட் :பனிப்பாறைகள் உருகி வருவதால் வேளாண்மை பாதிக்கும்!

எவரெஸ்ட் :பனிப்பாறைகள் உருகி வருவதால் வேளாண்மை பாதிக்கும்!

ங்கிலாந்து நாட்டின் மையின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 25 ஆண்டுகளில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது. இது பனியாக மாறிய நேரத்தை காட்டிலும் 80 மடங்கு வேகமாக உருகி வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றமும் வேகமான காற்றும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. சுமார் 2000 ஆண்டுகளாக உருவான பனிப்பாறைகள் 1990 ஆம் ஆண்டிலிருந்து உருகத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பனிப்பாறையின் அடர்த்தியான பகுதி அழிந்து, அடியில் உள்ள கருத்த பனிப் பகுதி மீது சூரிய ஒளி படர்வதால் பனிப்பாறை வேகமாக உருகி வருகிறது.

இந்த பகுதியின் காலநிலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆனால் வெப்பநிலை நிலையாக அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகுகிறது என்றும் இந்த ஆய்வில் ஈடுபட்ட லண்டன் கிங்க்ஸ் கல்லூரியை சேர்ந்த 10 விஞ்ஞானிகள் கொண்ட பருவநிலை ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இமாலய மலைத்தொடர்களை நம்பி சுமார் பல கோடி மக்கள் உள்ளனர். இவர்கள் குடிநீருக்கு இந்த மலைத்தொடர்களைதான் சார்ந்துள்ளனர். எனவே இந்த மலைத்தொடரில் உள்ள பனிப் பாறைகள் அனைத்தும் உருக தொடங்கினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, உலகின் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.a

error: Content is protected !!