சூயஸ் கால்வாயில் சிக்கியக் கப்பலால் டிராஃபிக் ஜாம்!- வீடியோ!

சூயஸ் கால்வாயில் சிக்கியக் கப்பலால் டிராஃபிக் ஜாம்!- வீடியோ!

ர்வதேச கடல் வர்த்தக பாதையில் எகிப்தின் சூயஸ் கால்வாய் மிக முக்கிய வர்த்தகப் பாதையாகும். 193 கிலோமீட்டர் நீளமுள்ள நீர்வழிப்பாதையில் பயணித்த எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதியபடி சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் எவர்கிவ்வன் சரக்கு கப்பல் சிக்கிக்கொண்டதால் அதன் பின்னால் பல கப்பல்கள் அணிவகுத்து நிற்கிறது. சிக்கிய கப்பலும் சாதாரண கப்பல் இல்லை. 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றாகும்.. சூயஸ் கால்வாயில் வந்து வசமாக சிக்கிய மிகப்பெரிய கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப்பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த கால்வாயின் வழியாகத்தான் சர்வதேச வர்த்தகத்தில் சுமார் 12 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் 8 சதவிகிதமும் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய் இந்த வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அதனால் ஓரிரு நாள்களில் கப்பலை மீட்க முடியவில்லை என்றால் கச்சா எண்ணெய் விலை ஏறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் எண்ணெய் விலையும் உயரும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!