பரோட்டா சூரியும் ஹீரோ ஆகப் போறாருங்கோ!
நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் 1999-ம் ஆண்டு திரைக்கு வந்தவர் நடிகர் சூரி. அதற்கு பின்பு 10 ஆண்டுகள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா உண்ணும் காட்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அன்றிலிருந்து சூரி என்ற அவரது பெயர் பரோட்டா சூரியாக மாறியது. தொடர்ந்து காமெடியானாக வலம் வந்த சூரி RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க போகிறார்.
ஹிட் அடித்த விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.
பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதா நாயகனாக நடிக்கின்றார்.குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.